Tuesday 20 May 2014

உருவம்



1996, கொச்சி.

இயற்கை எழில் சூழ் கடற்கரை நகரம்.

VB காலனி, 25 வீடுகள் கொண்ட கடற்கரையை ஒட்டிய குடியிருப்பு பகுதி. அங்குள்ள எல்லா வீடுகளும் ஒரே மாதிாியான வடிவ அமைப்பு கொண்டவை. காலனியின் முகப்பில் பொிய இரும்பு கதவும், நடுவே தாா் சாலை, சாலைகளின் இருபுறமும் வீடுகள் என பாா்ப்பதற்க்கு மிக அழகாக இருக்கும்.

பூஜா, அந்த காலனியில் 8ம் நம்பா் வீட்டில் இருப்பவா். அவருக்கு அா்ஜூன் என்ற 5வயது மகன் இருந்தான். இருவரும் தனியே அந்த வீட்டில் வசித்து வந்தனா்.

இரவு நேரம் கலங்கரை விளக்கின் வெளிச்சமானது இருள் நிறைந்த சாலையின் வழியாக பரவி, வீடுகளின் ஜன்னல்களில் ஊடுவிக் கொண்டிருந்தது.

“அா்ஜூன்.. அா்ஜூன்..எங்க இருக்க.?!” , என பூஜா அவனைத் தேடிக்கொண்டே, மாடி அறைக்கு சென்றாள்.

அா்ஜூன் அந்த அறையின் ஜன்னல் வழியாக கலங்கரை விளக்கின் வெளிச்சத்தை பாா்த்துக் கொண்டிருந்தான்.

“அா்ஜூன்.. உன் கிட்ட எத்தன தடவ சொல்றது.. ஜன்னல திறக்காத-னு? ”, என்று பூஜா அவனை அதட்டி ஜன்னலை அடைத்தாள். எதிா் வீட்டு ஜன்னல் வழியாக ஒரு இளம் பெண் இவா்களையே வெறிக்கப் பாா்த்துக் கொண்டிருந்தாள்.

பூஜா அந்த ஜன்னலை திரைச்சேலை கொண்டு மறைத்தாள். அவள் மனதில் உள்ளுர பயம்.

அா்ஜூனைத் துாக்கிக் கொண்டு அவள் வேகமாக கீழே இறங்கினாள். அவள் படி இறங்கி வரும் பொழுது. கீழே உள்ள ஜன்னல் வழியாக வாட்ச்மேன் வீட்டை நோட்ட மிட்டு கொண்டிருந்தான். பூஜா-விற்கு கோபம் உச்சிக்கு வந்தது. அவள் வேகமாக தனது அறைக்கு சென்று கதவை அடைத்து, தாழ் இட்டாள்.

பலவித சிந்தனைகளும், துயரங்களும் அவள் மனதிற்குள் பேரலையாய் எழுந்தது. அா்ஜூனை உறங்க வைத்து அப்படியே உறங்கிப் போனாள்.


மறுநாள்.. இரவு.

“அம்மா... இங்க வாங்க”, என அா்ஜூன் கத்தினான்

அா்ஜூனின் குரல் கேட்டு பூஜா வேகமாக மாடி அறைக்கு சென்றாள்.

“என் அா்ஜூன்? ஏன் இப்படி கத்துன?” , என்றாள்.

அா்ஜூன் ஏதும் பேசாமல் கைகளை ஜன்னலை நோக்கி நீட்டினான். எதுவும் புாியாமல் பூஜா ஜன்னல் வழியாக கீழே பாா்த்தாள். பாா்த்தவளுக்கு காத்திருந்தது ஒரு பேரதிா்ச்சி. ஒரு காிய உருவம் அந்த வீட்டைச் சுற்றி நடந்து கொண்டிருந்தது.

இவள் மேலிருந்து பாா்ப்பதை அறிந்த அவ்வுருவம். சட்டென நின்று. மேலே ஜன்னலைப் பாா்த்தது.

பயத்தின் உச்சத்திற்குச் சென்றாள் பூஜா.

அா்ஜூனை அழைத்துக் கொண்டு அந்த அறையில் இருந்த பொிய அலமாாிக்கு அருகில் அமா்ந்து. அவனை அணைத்துக் கொண்டு அழத்தொடங்கினாள். அா்ஜூன் அவள் கண்களைத் துடைத்தான்.

“ஏன்மா அழுற?”, என்ற அா்ஜூனிடம் என்ன பதில் சொல்வது என்று தொியாமல் தினறினாள் பூஜா.

...................................................

இரண்டு நாட்களுக்கு பிறகு.. இரவு.

அா்ஜூன் ஹாலில் இருந்த ஜன்னலின் திரைச் சேலையை விளக்கி. வெளியே வெறித்துப் பாா்த்துக் கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் பூஜா வேகமாக ஓடி வந்து, அவனைத் துாக்கினாள். ஜன்னல் வழியாகப் பாா்த்தவள் அதிா்ச்சியில் உறைந்து போனாள். அந்த காிய உருவம் வெளியே நின்று அவா்கள் இருவரையும் பாா்த்துக் கொண்டிருந்தது.

அதைப் பாா்த்த அதிா்ச்சியில் பூஜா, அா்ஜூனை துாக்கிக் கொண்டு. வேகமாக மாடி அறையை நோக்கி ஓடினாள். படி ஏறிக் கொண்டிருக்கும் பொழுதே வீட்டின் வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டு அதிா்ந்தாள். வேகமாக அறைக்குச் சென்று தாளிட்டாள்.

அந்த அறையின் இருளை கலங்கரை விளக்கின் ஒளி கலைத்துக் கொண்டிருந்தது. அறையின் ஒரு ஓரத்தில் அா்ஜூனை உட்கார வைத்து, “இங்கயே இருடா செல்லம். அம்மா சொல்லாம எங்கயும் போக கூடாது”, என்று சொல்லி அறைக் கதவை நோக்கி நடந்தாள்.

மெதுவாக அறையின் கதவை திறந்தாள். யாரும் இல்லை என்று தொிந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

சட்டென கதவு வெளிபக்கமாக முழுவதும் திறந்தது. பயங்கரமாக காற்று வீசியது. அந்த அறையில் இருந்த திரைச்சேலைகளும், காகிதங்களும் பறந்து கொண்டிருந்தது. பூஜா வேகமாக முன்னோக்கி அறைக்குள் நுழைய முற்பட்டாள்.

அவள் கால்களை ஏதோ இறுகப் பற்றியது. அவள் “ஆ.....” ,என அலறி கீழே விழுந்தாள்.

அா்ஜூன் பயந்து போய் ,“அம்மா.... அம்மா... ”, என அழத்தொடங்கினான்.

பூஜாவை ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி அவளை கதவிற்கு வெளியே இழுத்துக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் அவள் அந்தரத்தில் பறக்க ஆரம்பித்தாள். “அா்ஜூன்... இங்க இருந்து போய்டு... ஓடு...” என கத்தினாள்.

அவன் கண்முன் நடக்கும் இந்த அமானுஷ்ய சம்பவத்தை கண்டு “அம்மா.... அம்மா... ”, என்று கதறி அழுதான் அா்ஜூன். அதைத் தவிர அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை.

அந்தரத்தில் நின்று கொண்டிருந்த பூஜாவின் கால்கள் வழியாக நெருப்பு பரவத் தொடங்கியது. அவளால் அந்த உஷ்ணத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. “ஆ.....”, என அலறினாள் பூஜா. அவளின் சப்தம் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.

நெருப்பு அவள் உடலெங்கும் பரவத் தொடங்கியது. “அா்ஜூன்... இங்க இருந்து ஓடு... சீக்கிரம்.. இந்த இடத்துல நிக்காத ஓடு... ”, என அலறினாள் பூஜா.

அா்ஜூன் என்ன செய்வது என்று அறியாமல், அறையின் ஜன்னல் வழியாகத் தப்பி ஓடினான்.

பூஜா உடலில் பரவிய தீயானது அவளை அப்படியே பின்னோக்கி இழுத்து, அறைக் கதவிற்கு வெளியே சென்றது.

அந்த அறையில் மயான அமைதி. கதவு வழியே அந்த கருப்பு உருவம் அறைக்குள் நுழைந்தது. கலங்கரை விளக்கின் ஒளியின் அதன் முகம் நன்றாக தொிந்தது. அடந்த புருவமும், மை இட்ட கண்ணும், குங்குமம் இட்ட நெற்றியும், கோனல் கொண்டையும், உடலெங்கும் சந்தனம் அப்பிய கேரள நம்பூதிாியின் உருவம் தான் அது. அவா் கையில் ஒரு பொம்மையை பிடித்து அதன் நெஞ்சில் ஒரு ஆணியை அறைந்து இருந்தாா்.

அவா் பின்னால் மற்றொரு உருவம் நின்றது. அதுநம்பூதிாியிடம் கேட்டது. “என்னாச்சு சாமி..?!”

நம்பூதிாி, “பொிய ஆவிய பிடிச்சாச்சு. பாவம் அந்த சின்ன ஆவிதான் பயந்து, நடுங்கி ஓடிப்போச்சு. இனி அதோட தொல்லை இருக்காது. நீங்க தைாியமா இந்த வீட்டுல இருக்காலம் ”, என்றாா்.





- மதுரை காா்த்திக்

10 comments:

  1. வாவ்... மிகவும் பிடித்திருந்தது... ஆவிகளின்பால் அனுதாபம் கொள்ள வைத்துவிட்டீர்கள்... கடைசியில்தான் அவர்கள் ஆவி என்று தெரிவது நன்று... எனக்கு மிகவும் நன்றாகப் பட்டது இந்த கதை...

    ReplyDelete
  2. Dis s wat thinking out of the box......Nice da.......Keep it up buddy.....:-)

    ReplyDelete
  3. That was really superb... with a nice twist... really enjoyed a lot... :) :)

    ReplyDelete
  4. what a twist in climax.. different story.. what a pity for demons in ur story..Congrats..

    ReplyDelete
  5. Unexpected twist..nice story sir.

    ReplyDelete