Wednesday 11 January 2017

மார்த்தா - கடைசி பயணிப்புறா(The Last Passenger Pigeon)


ஒரு உயிரினத்தை கொடூரமாக அழித்துவிட்டு அதன் எச்சங்களையும், பூத உடல்களை மட்டும் நேர்த்தியாக பதப்படுத்தி கண்ணாடி பெட்டிகளில் பல அடுக்கு காவல் வைத்து பத்திரமாக பாதுகாக்கும் ஒரு நல்ல கலை உணர்வும், கருணையும் மனித இனத்திற்க்கு மட்டுமே உரிய ஒரு அழகிய பண்பாகும். அப்படி நாம்மால் அழிக்கப்பட உயிரினங்களை பட்டியலிட்டால் அதில் ஒரு முக்கிய இடத்தில் இருப்பது இந்த 'பயணிப்புறாக்கள்'. 

வட அமெரிக்காவில் ஒரு காலகட்டத்தில் கோடிக்கணக்கில் கூட்டம் கூட்டமாக பறந்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருத்த பயணிப்புறாக்கள் என்கிற காட்டுப்புறாக்கள் இனத்தை அங்கு வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியினர் போற்றுதலுக்குரியதாய் கொண்டாடினார்கள். ஆனால் ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் கால் பதித்த சில வருடங்களில் இந்த பறவையினமானது கூண்டோடு அழிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 500 கோடிக்கும் மேற்பட்ட பயணிப்புறாக்கள் இருந்துள்ளன, இவை எப்போதும் தனியே பறப்பதில்லை கூட்டமா பறந்து செல்லும் இயல்புடையது. மணிக்கு நூறு கிலோமீட்டர் என்ற அதிவேகத்தில் பறக்கும் திறன் உடைய இவை, கூட்டமாக பறக்கும் போது அந்த பகுதி முழுதும் கருமேக மூட்டத்திற்கு உள்ளானதுபோல் இருட்டிவிடும். 1873-ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி மெக்சிகன் நகரின் வான்வெளியில் காலை 7.30 மணிக்கு தொடங்கிய இந்த புறாக்களின் ஊர்வலம் முடிவதற்கு மாலை 4.30 மணி ஆனது. அண்ணார்ந்து பார்த்தால் கண்ணுக்கு தெரிந்த தூரம் வரை பயணிப்புறாக்கள் சாரை சாரையாக வந்து கொண்டே இருந்தன என்றும், இது போன்ற காட்சிகள் அந்த நாட்களில் மிக சாதாரணமானவை என்கிறார்கள், வரலாற்று ஆய்வாளர்கள்.

இப்படி பார்ப்பவர்களின் கண்களை உறுத்தும் அளவிற்கு பல்வேறு வண்ணங்களில் இறக்கைகளை விரித்து பறந்து பறந்து பரவசப்படுத்தியதும், அதன் அழகும், மென்மையுமே அதற்கு எமனாக அமைந்துவிட்டது போலும். வட அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் குடியேறிய போது அவர்கள் இந்த புறாக்களை மிகவும் தொந்தரவாக கருதி வேட்டையாடத் தொடங்கினார்கள். இவற்றை வேட்டையாடுவதும் மிக எளிதான காரியாம இருந்தது. அவை பறந்து செல்லும் பாதையில் வெறுமனே வலை விரித்தால் போதும் கொத்து கொத்தாக புறாக்கள் வலையில் சிக்கிவிடும். துப்பாக்கியால் வான் நோக்கி சுட்டால் போதும், அந்த சத்தம் கேட்ட மாத்திரத்திலே அதன் இதயத்துடிப்பு ஏகத்துக்கு எகிறி கூட்டம் கூட்டமாக இறந்து விழும். இன்னும் ஒரு எளிமையான வேட்டை முறையையும் பின்பற்றினர் அதாவது அவை கூட்டமாக பறக்கும் போது ஒரு கட்டையை அல்லது கல்லை வீசினாலும் போதும் கொத்தாக புறாக்கள் செத்து விழும்.  அதனால் இந்த பறவைகளை கண்மூடித்தனமாக வேட்டையாடி கொன்று குவித்தார்கள், ஐரோப்பியர்கள்.

அதுமட்டுமில்லாமல், இந்த பறவைகளை ரெயில் மற்றும் கப்பல் மூலமாக நியூயார்க் போன்ற நகரங்களுக்கு அனுப்பி வியாபாரம் செய்தனர். புறாக்களின் வர்த்தகம் லாபகரமாக நடைபெற்றது. இந்த புறாக்கறி விலை குறைவாக கிடைத்தால் இதற்கு அமெரிக்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. குறைவான விலையில் மிருதுவாக அதேசமயம் சுவையான இறைச்சி என்பதால் புறாக்களை வேட்டையாடுவதை முழுநேர வேலையாக செய்து அவற்றை வேகவேகமாக பரலோகத்திற்கு அனுப்பிவைத்தனர்.

இந்த பயணிப்புறாக்களில் பெண் புறா ஆண்டுக்கு ஒரே ஒரு முட்டை மட்டும்தான் இடும் தன்மையுடையது. எனவே அழிக்கப்படும் வேகத்திற்கு ஈடுகொடுத்து அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாத காரணத்தால், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனது பயணத்தை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலைக்கு பயணிப்புறா தள்ளப்பட்டது. உலகின் கடைசி பயணிப்புறாவான 'மார்த்தா' சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் 1914-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி மதியம் ஒரு மணிக்கு தனது மூச்சை நிறுத்தியது.

மனித இனத்தின் அறிவு வளர வளர மற்ற உயிரினத்தின்  அழிவு மட்டுமே பெருகி வருகிறது. தான் மட்டுமே மேலான உயிரினம் என்ற கர்வத்தை விட்டு என்று சக ஜீவராசிகளை பாதுகாக்கும் குணம் அவனிடம் வருகிறதோ அன்றுதான் அவன் ஆறறிவு படைத்தவனாக இருக்க முடியும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியானது மற்ற உயிரினத்தை அழித்து அதன் மீது கட்டப்படும் கல்லறைகளாக இருந்துவிட்டால், அது மனித இனத்தின் வளர்ச்சி பாதை அல்ல. அது அவன் அழிவிற்க்கான அஸ்திவாரம் மட்டுமே. இதுவே நிதர்சனம்.





- மதுரை கார்த்திக்.



நன்றி - விக்கிபீடியா மற்றும் தினத்தந்தி.

Tuesday 12 July 2016

அவள் அவன்



1994,

குறிஞ்சியும், முல்லையும் சந்திக்கும் ரம்மியமான இடம், பனி போர்த்திய புல்வெளியில் நின்றபடி தன் பார்வையை திசைகள் எட்டிலும் செலுத்தி எதையோ தேடிக்கொண்டிருந்தான் டேவிட்.

ஒரு புறம் வான் முட்டி வளர்ந்து மேகக்தில் தன் உச்சியை மறைத்துக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களும், அந்த ஊச்சியிலிருந்து பேறிரைச்சலுடன் விழும் அருவிகளும், மறுபுறம் பல சந்ததிகளை கடந்து ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்கள் நிறைந்த அடர்ந்த வனமும், புல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருந்த மான்களின் கூட்டமும், பறவைகளின் சப்தமும், பூத்துக்குலுங்கும் வண்ணமலர்களும், அம்மலரின் தேனருந்த சுற்றித்திரியும் வண்ணத்துப்பூச்சிகளும், ரீங்காரமிடும் வண்டுகளும் என எதுவும் அவன் கண்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அவன் கண்களின் தேடலும் முடியவில்லை.

அருவியின் சாரலோ அல்லது பனியின் குளிர்ச்சியோ எது அவனை தீண்டியது என காரணம் தெரியாமல் அவனது உடல் சிலிர்க்க, சட்டென திரும்பி கண் எட்டும் தொலைவில் நின்றிருந்த  அவள் மீது தன் பார்வையை செலுத்தினான் டேவிட்.

"அவள். அவளே தான்.", என அவன் மனம் சொல்ல, அவனுடைய நீண்ட தேடலுக்கான விடை கிடைத்த மகிழ்ச்சி அவன் முகமெங்கும் பரவ, சந்தோஷ மிகுதியில் அவளை நோக்கி ஓடத்தொடங்கினான். டேவிட்டை கண்ட அந்த 'அழகு மங்கை' வெட்கத்தில் திரும்பி, பின் அவளும் வனப்பகுதியை நோக்கி மெல்ல ஓடத் தொடங்கினாள். ( மன்னிக்கவும் அவளின் பெயர் அறியாத காரணத்தால் அவளை 'அழகு மங்கை' என்றே குறிப்பிடுகிறேன். அதற்கும் காரணம் உண்டு, அவள் உடையை பார்க்கும் போது மலைவாசிப் பெண்னைப் போல தெரிந்தாலும், அவளின் அழகிற்க்கு தேவலோக மங்கைகளும் ஈடாக மாட்டார்கள். அவளின் அழகை பற்றி நான் எழுத வார்த்தைகளின்றி மௌனமாகி இங்கே முடிக்கிறேன்.)

டேவிட் அவளை பிடிக்க ஓடத்தொடங்கிய அந்த நொடி எங்கோ தூரத்தில், "காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே.." என்ற பாடல் இசைக்கத் தொடங்கியது. அவன் அந்த அழகு மங்கையை நெருங்கி செல்ல செல்ல அப்பாடலின் ஒலியும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் அந்த ஒலியின் அளவு மிகவும் அதிகரிக்க, அவனால் பொருத்துக்கொள்ள இயலாமல் காதுகளைப் இரு கைகளால் அடைத்தவாரு ஆத்திரத்தில் "ஆ......", என அலறியவாரு கண்களை விழித்தான்.

"டேய் *** சவுண்ட கம்மி பண்ணுடா", என படுக்கையில் இருந்து எழுந்தபடி அரவிந்தை திட்டினான் டேவிட்.

"என்னடா மப்பிள, செம கடுப்புல இருக்க? இன்னைக்கும் அதே கனவா?", என்றான் அரவிந்த்.

டே : மொதல்ல அந்த பாட்ட நிறுத்து.. செம கோபத்துல இருக்கேன்.

அர : சரி.. இன்னைக்காச்சும் உன் கனவுகன்னிகிட்ட பேசுனியா?

டே : இல்லடா.. வழக்கம் போல ஓடிட்டா.. நான் எப்படியும் இன்னைக்கு அவளை பிடிச்சுருப்பேன். *த்தா நீதான் சவுண்ட் வச்சு என் கனவ கலச்சுட்ட.

அர : அடேய் ஆறு மாசமா நீ இதைதான்டா சொல்ற. இந்த ஆறுமாசத்துல ஊருக்குள்ள இருக்குற பொண்ணுங்க பின்னாடி சுத்தியிருந்தாலும், இந்நேரம் யாரையாச்சும் கல்யாணம் பண்ணியிருப்ப.

டே : டேய்... அவ ஆறுமாசமா ஒரு நாள்விடாம என் கனவுல வந்துட்டு இருக்காடா. அதே இடத்துலதான் நான் தினமும் அவள பார்க்குறேன். தினமும் அவள ஓடிப்போய் பிடிக்கலாம்னு கிட்ட போவேன், ஆனா என்ன காரணம்னு தெரியல, அவள நெருங்கும் போதெல்லாம் எதாவது ஒரு தடங்கல் வருந்துட்டே இருக்கு. ஆனா ஒன்னு, கண்டிப்பா ஒருநாள் அவள நேர்ல பார்ப்பேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. உனக்கு இதெல்லாம் புரியாது.

அர : சரி.. அதை விடு மாப்பிள, காலங்காத்தால ரொம்ப ஃபீல் பண்ணாத, உடம்புக்கு ஆகாது. அப்பறம், நைட் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன், நேற்று வானதி மாத இதழோட ஆசிரியர் வந்தாரு, அட்டை பட ஓவியம் தயார் ஆகிடுச்சானு கேட்டாரு. முடிச்சுட்டியா?

"ஹ்ம்....முடிய போகுது.  இன்னைக்கு சாயங்காலம் வந்து வாங்கிக்க சொல்லு", என்று கூறியவாரு அவனால் ஓவியமாக வரையப்பட்ட அந்த அழகு மங்கையின் அருகே சென்று கண் இமைக்காமல் அந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நீண்ட பெருமூச்சை எடுத்து,"நீ இப்ப எங்க இருக்க?" என தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

----

டேவிட் ஒரு ஓவியன். மாத இதழ்கள் மற்றும் நாவல்களுக்கு வரைந்து கொடுக்கும் ஓவியங்களின் மூலம் ஆதாயம் பார்பவன். அரவிந்த் வேலையில்லா பட்டதாரி. இருவரும் சொந்த ஊரைவிட்டு பிழைப்பிற்க்காக சென்னை வந்துள்ளனர்.

சற்றுமுன் டேவிட் கூறியது போல கடந்த ஆறுமாதமாக அவன் கனவில் அந்த அழகுமங்கை தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறாள். ஒவ்வொரு நாளும் அவளிடம் பேச நினைத்து அவளை நெருங்கும் போதெல்லாம் அவன் கனவு கலைந்து விடும். வெறும் கனவு என்று சாதாரணமாக அவன் நினைக்கவில்லை, எங்கோ அவள் தனக்காக காத்துக் கொண்டிருப்பதாகவே நம்பினான் டேவிட். அவன் தங்கியிருக்கும் அறையில் உள்ள பெரும்பாலான ஓவியங்களில் அந்த அழகு மங்கையே ஆக்கிரமித்து இருந்தாள். கனவில் கண்டவளை அவ்வளவு நேர்த்தியாக ஓவியமாக உயிர் கொடுத்து இருந்தான் டேவிட்.

என்றாவது ஒருநாள் அவளை எப்படியும் நேரில் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருந்தான். அந்த நம்பிக்கையே அவள் மீது காதல் வர காரணமாக இருந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கையே ஒரு நாள் அவள் இருக்கும் இடத்திற்க்கு இவனை கொண்டு செல்ல இருக்கிறது என்பதை இன்று இவன் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிலநாட்களுக்கு பிறகு..

டேவிட் தன் கனவில் வழக்கம் போல அந்த அழகு மங்கையை கண்ட மகிழ்ச்சியில் அவளை நோக்கி ஓடத் தொடங்கினான். எப்படியும் இன்று அவளிடம் பேசிட வேண்டும் என்ற ஆர்வமிகுதியில் வேகமெடுத்து ஓடினான். அந்த அழகு மங்கையோ வழக்கம் போல அவனை கண்டு வெட்கத்தில் திரும்பி, அந்த அடர்ந்த வனம் நோக்கி ஓடினாள். இருவரும் அந்த அடர்ந்த வனத்திற்குள் சென்றனர், இந்த வனத்திற்குள் டேவிட்டின் காலடிகள் படுவது இதுவே முதல்முறையாகும்.

காட்டிற்குள் சென்றதும் அந்த அழகு மங்கை எங்கு மறைந்தாள் எனத் தெரியவில்லை. டேவிட் விழிகள் அவளைத் தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென அங்கு இருள் பரவத் தொடங்கியது. சுற்றி இருள் அவன் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. பயத்தில் உறைந்து நின்றான், உடலை அசைக்க முடியவில்லை.

யாரோ அவனது முகத்தில் நீர் தெளித்து, கன்னத்தை தட்டுவதைப் போன்ற உணர்வு.. தன்னை சுற்றி வினோதமான பல ஒலிகள் கேட்பதை உணர்ந்தான். "மயிலா... மயிலா.. கண்ணத்தொற, ஐயோ..என்ன ஆச்சு இவளுக்கு",என யாரோ அவன் காதருகே பதற்றத்துடன் கத்துவதைக் கேட்டு, போராடி கண்களைத் திறந்த டேவிட்டிற்க்கு காத்திருந்தது ஒரு பேரதிர்ச்சி.

தன்னைச்சுற்றி மலைவாழ் மக்கள் கூட்டமாக நின்றிருப்பதைக் கண்டான். அவன் தன் கனவில் தினமும் காணும் அதே இடத்திற்க்கு அருகே மயங்கி கிடந்திருப்பதை உணர்ந்தான். மெதுவாக எழ நினைத்தவன், அருகில் தேங்கிக்கிடந்த தண்ணீரில் தன் முகத்தைப் பார்த்தான். அப்போது டேவிட் கண்ட காட்சியானது அவன் இரத்த நாளங்களை உறையச் செய்தது.

தண்ணீரில் தெரிந்தது ஒரு பெண்ணின் முகம் அதுவும் டேவிட் கனவில் தினமும் வரும் அந்த அழகு மங்கையின் முகம். ஆம், தற்போது அவன் உயிர் மயிலா-வின் உடலில் உள்ளது.(அழகு மங்கையின் பெயர் 'மயிலா' ஆகும். இனி அவளை அவ்வாறே அழைக்கலாம்)

பதற்றமும்,பயமும் அவனைத் தொற்றிக் கொள்ள சட்டென எழுந்தவன் சுற்றி இருந்தவர்களை பார்த்து, "நீங்க எல்லாம் யாரு?" என குழப்பமாக கேட்க, சுற்றி இருந்தவர்களில் ஒரு பெண், "ஹேய்.. என்னாச்சு மயிலா உனக்கு?"என ஏதோ பேசத் தொடங்கும் போது, மயிலாவாக மாறிய டேவிட் அந்த பெண்ணிற்க்குப் பின்னால் ஒரு பாறையில் அவன் உருவம் ஓவியமாக வரைந்திருப்பதைப் பார்த்து அதிர்ந்தான்.

குழப்பத்தினாலும், அடுத்த அடுத்த அதிர்ச்சிகளினாலும், சொல்வதறியா பயத்தின் உச்சத்தில் இருந்த டேவிட், அந்த ஓவியத்தின் அருகே சென்று அதை மெதுவாக தன் கைகளால் வருடினான். சட்டென அவன் பார்வை வளையல் அணிந்த தன் கைகளின் வழியாக, பெண்மை ததும்பும் அவனின் உடல் மீது பரவியது. திடீரென அவன் கண்கள் இருளில் மூழ்க, அப்படியே மயங்கி கீழே விழுந்தான்.

மயக்கத்திலிருந்து கண்விழித்த டேவிட், உள்ளாடை மட்டும் அணிந்து அறையின் மூலையில் ஓரமாக மிரண்டு போய் அமர்ந்திருந்த அரவிந்தை பார்த்து, மெதுவாக எழுந்து  அவன் அருகே சென்றான்.

அர : ஏய்.. அங்கயே நில்லு கிட்ட வராத. இனிமே என்னால அடி தாங்க முடியாது, என்றான்.

டே : டேய்.. என்னடா சொல்ற, நான் எப்ப உன்ன அடிச்சேன்? சரி, நீ ஏன்டா இப்படி ஜட்டியோட உட்கார்ந்துட்டு இருக்க?

அர : நல்லா வாய்ல வந்துரும்டா. ஊமை குத்தா குத்திட்டு இப்ப ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்குற.!

டே : சத்தியமா என்ன நடந்துச்சுனு எனக்கு தெரியலடா.. தயவு செய்து சொல்லு..

அர : நான் பாத்ரூம்ல இருந்து குளிச்சுட்டு தலை துடைச்சுட்டே வெளிய வந்தேன். கட்டில்ல பித்து பிடிச்சமாதிரி நீ உட்கார்ந்து இருந்த, என்ன பார்த்ததும் "ஆ..ஊ...",னு கத்துன, நான் என்ன ஆச்சோனு பயந்து போய் உன்கிட்ட வந்தேன். நான் ஏதோ உன்ன கற்பழிக்க வர மாதிரி அலறி, என்ன அடி அடினு அடிச்ச. வலி தாங்க முடியாம நான் ஓரமா போய் உட்கார்ந்துட்டேன். அப்புறம், ரூம சுற்றி நீ வரைஞ்சு வச்சுருக்க உன் ஆளோட ஓவியத்தை எல்லாம் பார்த்துட்டு அப்படியே மயங்கி விழுந்துட்ட.

அரவிந்த் கூறியதைக் கேட்டு  பதற்றத்தோடு, "அப்படினா..!! அது கனவு இல்ல.! நான் அவ உடம்புல இருந்த மாதிரி, அவ என் உடம்புல வந்துருக்கா..!!", என்றான் டேவிட்.

அர : எவடா?

டே : மயிலா.

"யாருடா மயிலா?",என அரவிந்த் குழப்பத்துடன் கேட்க, நடந்த அனைத்தையும் அவனிடம் டேவிட் சொல்லி முடித்தான்.

அர : என்னடா சொல்ற. அப்போ அந்த பொண்னு உண்மையாவே இருக்காளா?

டே : ஆமாம்டா..  இங்க நான் எப்படி அவள கனவுல பார்த்து, காதலுச்சு, அவளுக்காக நான் ஒவ்வொரு நாளும் காத்துட்டு இருந்தேனோ, அங்க அவளும் எனக்காக காத்துட்டு இருந்துருக்கா.

அர : இப்போ என்ன பண்ணப்போற?

டே : அவளத்தேடி போகப்போறேன்.

அர : எங்கனு போய் தேடுவ.

டே : தெரியல.. ஆனா கண்டிப்பா. அவள கண்டுபிடிப்பேன்.

-------

அந்த நிகழ்விற்க்கு பிறகு டேவிட் கனவில் மயிலா வருவதில்லை. ஆனால் இருவருக்குள்ளும் இருந்த காதலும், நம்பிக்கையும் துளியும் குறையவில்லை. இருவரும் நேரில் சந்திக்கும் நாள்  வெகுதொலைவில் இல்லை என முழுமையான நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

நாட்கள் கடந்தன..

டேவிட் தனது பத்திரிக்கை நண்பர்களின் உதவியுடன், மிகுந்த சிரமப்பட்டு மயிலா இருக்கும் அந்த மலைக்கிராமத்தை கண்டறிந்தான். அவன் சென்ற நேரம் பருவமழை தீவிரமடைந்து கொண்டிருந்தது. அந்த கிராமத்திற்க்கு நடை பயணமாகத்தான் செல்ல இயலும். மழை கொட்டிக் கொண்டிருந்தது. கடினமான மலைப்பாதையை கடந்து ஒருவழியாக கனவில் அவன் காணும் அந்த இடத்தை அடைந்தான்.

கருமேகங்கள் சூழ்ந்து மழைக் கொட்டுகின்ற காரணத்தால் மொத்த இடமும் இருளின் பிடியில் இருந்தது, அவ்வப்பொழுது வந்த மின்னல்களின் கீற்றில் சிதறிய ஒளியின் உதவியோடு தன் முகம் வரையப்பட்ட அந்த பாறையின் அருகே வந்தான் டேவிட்.

அப்பொழுது அவன் காதில் இடி மற்றும் மழையின் சப்தங்களையும் தாண்டி அந்த குரல் கேட்க, குரல் வந்த திசை நோக்கித் திரும்பினான். தூரத்தில் ஒரு இளம் பெண்,"ஏங்க.. அந்த பக்கம் போகாதீங்க!",என எச்சரித்தபடி ஓடி வந்தாள். இருளில் அவள் முகம் சரியாகத் தெரிந்திருக்க வாய்பில்லை.

மீண்டும் அதே மின்னல் வெளிச்சம் பரவ, ஓடி வந்தவள் அவனை கண்ட அந்த நொடி சிலையாக உறைந்து நின்றாள். ஆம், அவள் மயிலா தான்,  இத்தனை நாட்கள் இருவரும் காத்திருந்த அந்த தருணம் இதோ வந்துவிட்டது. மின்னல் வெளிச்சத்தில் இருவரும் சந்தித்த அந்த நொடியில் பிறவிப் பயனடைந்து விட்டதாகவே இருவரும் நினைத்தனர். பெருக்கெடுத்த ஆனந்த கண்ணீரும் மழைத்துளிகளுடன் கலந்து இருவரின் கன்னங்களை நனைத்து போனது. நீண்ட மௌனத்திற்கு பின் டேவிட் அவள் பெயரை உச்சரித்து, அவள் அருகே நெருங்கினான்.

அப்பொழுது, பயங்கர சப்தமுடன் ஒரு பெரும் பேரிரைச்சல் ஏற்பட, சப்தம் கேட்ட திசைபக்கம் இருவரும் திரும்பினர். மின்னல் வெளிச்சத்தில் அந்த பயங்கரத்தை கண்டனர். காட்டாற்று வெள்ளமானது தன் வழியில் இருந்த சிறு  பாறைகளையும், மரங்களையும் அடித்துக் கொண்டு அவர்கள் இருந்த திசை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த வெள்ளமானது அவர்களை இழுத்துச் சென்றது. டேவிட் நீரின் வேகத்திலும் மயிலாவை மீட்க போராடி நீந்தினான். இருளில் அவள் எங்கிருக்கிறாள் என தெரியாத போது, சட்டென பரவிய மின்னலின் வெளிச்சத்தில் சற்று தொலைவில் அவள் உடல் முழுவதும் நீருள்மூழ்கி இரு கைகள் மட்டும் வெளியே தெரிந்தபடி  தத்தளித்துக் கொண்டிருந்தாள். அதை கண்ட டேவிட் அதிர்ச்சியில் "மயிலா..... மயிலா...!!", என அலறினான். பாவம், அந்த அலறல் நீரில் மூழ்கிய அவளது காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.

மீண்டும் இருள் பரவிய அந்த நொடி, அவ்வளவு நேரம் "மயிலா.. மயிலா..", என அலறிய டேவிட்டின் குரலும் கேட்கவில்லை. பேறிரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்த காட்டாற்றின் இரைச்சல் மட்டுமே நம் காதுகளில் விழுந்தது கொண்டிருந்தது. அடுத்து வந்த மின்னல் வெளிச்சத்தில் மயிலாவைத் தேடி போராடி நீந்திக் கொண்டிருந்த டேவிட்டையும் காணமுடியவில்லை. நீரின் வேகத்தில் இருவரும் மூழ்கப்பட்டு வெவ்வேறு திசைகளில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அந்த மின்னல் வெளிச்சத்தில் ஆக்ரோஷத்தின் உச்சத்தில் பேறிரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்த அந்த காட்டாற்று வெள்ளத்தின் கோரத்தாண்டவத்தை மட்டுமே நம்மால் காண முடிந்தது.


( நண்பர்களே.. திடீரென நிகழ்ந்த இந்த பயங்கர விபத்தில் காணாமல் போன அவளையும், அவனையும் மீட்டு, அந்த கனவுக்காதலர்களை வாழ வைக்கும் பொறுப்பினை நான் உங்களின் கற்பனை சக்தியிடம் ஒப்படைக்கிறேன். சேர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இக்கதையை இங்கே முடிக்கின்றேன். நன்றி. )




- மதுரை கார்த்திக்




Tuesday 21 June 2016

திருடா திருடி



காலை 9மணி,
வைகை விரைவு இரயில் திருச்சி இரயில் நிலையத்தை அடைந்த அந்த நொடி.. இரயிலில் இருந்து இறங்குபவர்களுக்கும், ஏறுபவர்களும் போட்டிபோட்டு முந்திக் கொண்டும், விட்டுக்கொடுத்து விலகிநின்றும், சிறுசிறு வாக்குவாதங்களோடு இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொண்டும் தங்களின் பயணத்திற்க்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.

பயணிகளின் கனிவான கவனம் முழுவதும் தற்போது வான் கிளித்து கொட்டிக் கொண்டிருக்கும் மழையின் மீதே இருந்திருக்க வேண்டும். ஏனெனில் நேற்று இரவு முதல் லேசான சாரலோடு பெய்த மழை கடந்த ஒரு மணி நேரமாக கனமழையாக கொட்டிக் கொண்டிருக்கிறது.

இரயில் நிலையத்தில் "டீ, காபி, சமோசா" போன்ற வார்த்தைகளின் கலவையான ஒலியும், "பாப்பா.. அடி வாங்க போற, மழைல நனையாதனு எத்தனை தடவ சொல்றது" என அதட்டும் அம்மாவின் சப்தமும், "இன்னைக்குள்ள மழை விடாதுனு நினைக்குறேன்" என வயதான இரு நண்பர்களின் உரையாடலும், "இவன் பிஸ்கட் போடுவானா, மாட்டானா"என திண்பவனின் வாய்பார்த்து வாலாட்டிக் குறைக்கும் நாய்க்குட்டியும், "ஐயோ.. அம்மா" என அலறி வழுக்கி கீழே விழுந்த வாலிபனின் சப்தத்தினால் அமைதியாகின.

வழுக்கி விழுந்தவனை கைதாங்கலாக தூக்கிவிட்டு, "ஏன் பாஸ் இவ்ளோ வேகமா போறீங்க, இன்னும் 5 நிமிசம் இருக்கு ட்ரெயின் கிளம்புறதுக்கு, பொறுமையா போங்க பாஸு " என்று சொல்லிய சிவா, அசட்டுப் புன்னகையுடன் "தாங்க்ஸ் ஜீ" என விழுந்தவன் கூறியதை  கவனிக்காமல் தூரத்தில் இருந்த ஆவின் பால் டிப்போவை நோக்கி நடந்தான். 

"திருச்சில எவ்வளவோ ஸ்பெஷல் இருந்தாலும், இரயில் நிலையத்துல இருக்குற ஆவின் பால் காபி தனி ஸ்பெஷல்னு", தன்னோட ஃரென்ட்ஸ் சொன்னது சிவாவிற்க்கு நியாபகம் வந்தது, "அண்ணா ஒரு காபி என சொல்லிவிட்டு, இங்க இருந்து பஸ் ஸ்டாப் எவ்ளோ தூரம்?, மதுரைக்கு மதியம் ட்ரெயின் இருக்கா?" போன்ற கேள்விகளுக்கான விடையை கடைக்காரரிடம் பெற்றுக் கொண்டு காபி சுவைக்கத் தொடங்கினான்.

மழையின் தீவிரம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. மழையை பார்த்துக் கொண்டு இருந்தவனின் கவனம் தூரத்தில் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் மேல் பதிந்தது. "ஆஹா..அடடா பெண்னே.. " என இசைப்புயலின் இசை கடையில் இருந்த வானொலியின் வழியாக இசைக்க, இதழோரம் எழும் சிறு புன்னகையுடன் தன் முழு கவனத்தையும் அவள் பக்கம் திருப்பினான் சிவா.

மாயா, கண்களில் பதட்டத்தோடு சுற்றிப்பார்த்தவள், சிவா நிற்க்கும் பக்கம் எட்டிப்பார்த்து அப்பாடா.. "D5 கோச் இங்க தான் நிற்குது" என தனக்குள்ளே கூறிக்கொண்டு நிம்மதிப் பெரு மூச்சுவிட்டு, அவனை நோக்கி நெருங்கி வந்தாள். காலியான அந்த காப்பி குவளையை தன்னை மறந்து ருசித்துக் கொண்டிருந்தான் சிவா.

ரெயில் கிளம்ப இன்னும் சில மணித்துளிகளே உள்ளது. ரயில் பெட்டியின் மீது தன் பார்வையை செலுத்தி, சிவாவை நோக்கி வேகமாக முன்னேறி வந்தவள், எதிர்பாராதவிதமாக சிவாவின் மீது மோதினாள். அவ்வளவு நேரம் சுயநினைவற்று கிடந்தவன், சட்டென திரும்பினான். "ஐயோ.. சாரி சார், தெரியாம இடிச்சுட்டேன்.. சாரி சார்" என அவள் கெஞ்சுவதை கண்கொட்டாமல் பார்த்து, "பரவாயில்ல மேடம், ஒன்னும் பிரச்சனயில்ல.. நீங்க போங்க" என அசடுவழிய பதிலளித்தான்.

இரு அடிகள் எடுத்து முன்னேறியவள் மீண்டும் அவன் பக்கம் திரும்பி புன்னகைத்தாள். சிவா அசட்டுப் புன்னகையோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் இரயில் படிகளில் ஏறி உள்ளே செல்வதற்க்கும், இரயில் தன் பயணத்தை தொடங்கவும் சரியாக இருந்தது.

இரயில் மெதுவாக நகர்ந்து சிவாவை கடக்கும் பொழுது, மாயா கண்களில் குறும்போடு அவனை பார்த்து தன் வலது கையை உயர்த்தி அசைத்தாள். அவ்வளவு நேரம் அசட்டுப் புன்னகையுடன் சிரித்துக் கொண்டிருந்தவன் அவள் கையில் தனது புது ரக செல்போன் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போய் தன் சட்டைபை, பேண்ட் வலது மற்றும் இடது பைகளில் படபடப்புடன் தேடினான். அவனது கைப்பேசியை காணவில்லை.

சிவாவின் முகத்தில் அதிர்ச்சியை பார்த்த மாயா கலகலவென சிரிக்கத் தொடங்கினாள். அதிர்ச்சியில் இருந்து மீண்ட சிவா தன் பேண்ட் பின் பையில் இருந்த மற்றொரு கைபேசியை எடுத்து அவளை நோக்கி காட்டினான். அதைக்கண்ட மாயாவிற்க்கு பேரதிர்ச்சி. காரணம் சிவாவின் கையில் இருப்பது அவளுடைய கைபேசியாகும்.

இரயில் வேகமாக முன்னேறியது, மாயா, பதற்றத்தோடு சிவாவிடம் திருடிய கைப்பேசியில் தன் கைபேசி எண்னை வேகமாக டைப் செய்து டயல் செய்தாள். முதல் ரிங்கிள் அழைப்பை ஏற்றான் சிவா..

மாயா : ஓய்..

சிவா : ஓய்......

மா : அடப்பாவி, நீ என்னவிட பெரிய கேடியா இருக்க..

சி : ஹேய்..இது நான் சொல்ல வேண்டிய டயலாக், நீ சொல்ற..

மா : ஹ்ம்.. சரி அதவிடு. எனக்கு என் போன் வேணும், அது எனக்கு ரொம்ப ராசியான போன். ப்ளீஸ் திரும்ப கொடுத்துடு.. நானும் உன் போன்-ன கொடுத்துடறேன்.

சி : ஹா..ஹா.. நீ எடுத்தது என் மொபைலே இல்லை. நானே இப்ப தான் கீழ விழுந்த ஒருத்தன்கிட்ட இருந்து ஆட்டைய போட்டேன். புது மாடலா இருக்கேனு நினச்சேன். பார்த்தா, அடுத்த 5 நிமிசத்துல என்கிட்ட இருந்து நீ அடிச்சுட்டு போய்ட்ட..

மா : எனக்கு அதெல்லாம் தெரியாது. எனக்கு என் போன் வேணும்.

சி : சரி.. வாங்கிக்கோ.. ஆனா.. இதனால எனக்கு என்ன கிடைக்கும்?

"நீ திருடின புது மாடல் செல்போன் உனக்கே திரும்ப கிடைக்கும்,  அப்புறம் என்ன திரும்ப ஒரு தடவ மீட் பண்றதுக்கான சான்ஸ்-ம் கிடைக்கும். டீல் ஓகேவா?" , என்று குறும்புடன் சொல்லிச் சிரித்தாள் மாயா.

"முதல்ல சொன்னதவிட, ரொண்டாவதா சொன்ன விஷயத்துக்காக கண்டிப்பா வருவேன்", என தன் புருவத்தை ஆள்காட்டி விரலால் வருடியவாரு ரெயில் சென்ற பாதையை பார்த்துக் கொண்டே, சிறு வெட்கத்துடன் புன்னகைத்தான் சிவா.

( இது இவர்களின் முதல் சந்திப்பு. ஆனால் இன்னும் ஒரு வருடத்தில் இருவரும் கணவன், மனைவியாக வாழ்க்கையில் பயணிக்க இருப்பதை இன்று இவர்கள்
  தெரிந்திருக்க வாய்ப்பில்லை)




- மதுரை கார்த்திக்




Thursday 9 June 2016

சிவப்பு


இரவு, பெருமழை நின்ற தூவான நேரம்..  அமைதியான அந்த இருவழி சாலையின் தெரு விளக்குகள் அனைத்தும் மின்சாரமின்றி பிணமாகக்கிடந்தன.

 சாலையின் இருளையும், மழைப்பூச்சிகளின் சப்தத்தினையும் கலைத்துக் கொண்டும், சாலையில் தேங்கிக்கிடந்த சிறு சிறு தண்ணீர் குட்டைகளை கடந்து வேகமாக காரில் வந்து கொண்டிருந்தான் பரத்.

முகத்தில் சற்று பதற்றம் படற.. அந்த இருள் நிறைந்த சாலையை வேகமாக கடந்து கொண்டிருக்கும் அந்த நொடி. சாலையின் வலப்புறத்தில் குடை பிடித்தவாறு காத்துக் கொண்டிருந்த பெண்னை பார்த்ததும் சற்று தணிந்தது. வேகத்தையும், பதற்றத்தையும் ஒரு சேர குறைத்து, வண்டியை நிறுத்தினான்.

சிவப்பு நிற சேலையும், அதே வண்ணத்தின் சற்று தூக்கலாக இதழ் சாயமும், தலை நிறைய மல்லிப்பூ வைத்து யாரையும் சுண்டி இழுக்கும் வசீகர மணத்துடனும், நின்று இருந்த ஸ்ருதி. காரின் அருகே வந்து நின்றாள்.

 இருவருக்கும் சாதகமாக பேரம் பேசி முடிக்கப்பட்டது. அங்கிருந்து கார் அவளை ஏற்றிக்கொண்டு மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது..

"உன்ன இந்த ஏரியால பார்த்து இல்லையே", என்று ஸ்ருதி கூற, "ஊருக்கு புதுசு இன்னைக்கு தான் வந்தேன்", என்றான் பரத்.

ஏன் இவ்ளோ வேகமா ஓட்டுற, அவ்ளோ அவசரமா, என்று சொல்லி சிரித்தாள்.

நீங்க நினைக்குற மாதிரி நான் இல்ல, எனக்கு உங்களோட உதவி வேணும். தயவு செஞ்சு முடியாதுனு சொல்லிடாதீங்க.  எனக்கு வேற யாரையும் இங்க தெரியாது. ப்ளீஸ்.

யோவ்.. என்னயா செல்ற.. இங்கபாரு மொதல்ல வண்டிய நிறுத்து.. என்னால உனக்கு எந்த உதவியும் பண்ணமுடியாது.

ப்ளீஸ், தயவு செய்து முடியாதுனு சொல்லாதீங்க. என் பொண்னு பெயர் யாழினி. 6வயசு ஆகுது. குழந்தை பிறந்து கொஞ்ச நாள்ல என் பொண்டாட்டி இறந்துட்டா. சொந்தம், பந்தம்னு யாரும் எங்களுக்கு இல்லை. தனி ஆளா இருந்துதான் என் பொண்ன வளர்த்தேன். சந்தோஷமா போய்டு இருந்த வாழ்க்கைல விதி விளையாடிருச்சு. இந்த ஊருக்கு வந்துட்டு இருக்கும் போது ஒரு ஆக்சிடென்ட். இப்ப அவ உயிருக்கு போராடிட்டு இருக்கா. தயவு செய்து அவள காப்பாத்துங்க. என்று கூறி கதறி அழத்தொடங்கினான். அவனுக்கு என்ன பதில் சொல்ல என்று புரியாமல் அமைதியாக  இருந்தாள் ஸ்ருதி. திடீரென பரத் காரை ஓரமாக நிறுத்தி இறங்கினான். ஒன்றும் புரியாதவளாக குழப்பத்தில் இருந்த ஸ்ருதி காரை விட்டு இறங்கினாள்.

அந்த நேரம் மின்சாரத்தின் வரவால் சாலையின் விளக்குகள் சட்டென உயிர் பெற, சாலையின் இருள் மறைந்து ஒளி பரவியது. வெளிச்சத்தில் சாலையின் மறுபுறம் மரத்தில் மோதியபடி ஒரு கார் நின்று கொண்டிருப்பதைக் கண்டாள். சாலையை கடந்து காரின் அருகே சென்றவளுக்கு காத்திருந்தது ஒரு பேரதிர்ச்சி. அவ்வளவு நேரம் தன்னுடன் பேசிக்கொண்டிருந்த பரத். காரில் இரத்த வெள்ளத்தில் பிணமாகக்கிடந்தான். காரின் பின் புற இருக்கையில் மயங்கிய நிலையில் காயங்களுடன் கிடந்தாள் யாழினி.

பயத்தின் உச்சத்தில் இருந்தவள், மெதுவாகத் திரும்பினாள். சாலையின் மறுபுறம் தான் வந்த காரை காணவில்லை, சுற்றும் முற்றும் பார்த்தால் சற்று தொலைவில் பரத்தின் ஆவியானது அவளை கண்கலங்கி கையெடுத்து கும்பிட்டவாறு காற்றில் கறைந்தது.

தன்னுடைய தந்தையின் வற்புறுத்தலில் விபசாரத்தை தொழிலாக எடுத்துக்கொண்டவளுக்கு , இன்று தான் புரிந்தது எல்லா ஆண்களும் தவறானவர்கள் இல்லை என்று,

நாட்கள் கடந்தன..

விபத்தில் பழைய நினைவுகளை முற்றிலும் இழந்த யாழினிக்கு  தாயாகவாக மாறினாள் ஸ்ருதி. புதியவாழ்கையில் தாயும், மகளும் சந்தோஷமா பயணித்தார்கள்.

இனி எல்லாம் சுபமே..




- மதுரை கார்த்திக்



Friday 29 May 2015

ஓஜா போர்டு (Ouija Board)


ஓஜா போர்டு (Ouija Board) என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது? அதை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை பற்றி நான் படித்து அறிந்த விடயங்களை தங்களிடன் பகிா்கிறேன்.

இறந்தவா்களிடம் தொடா்பு  கொண்டு அவா்களிடம் பேச உதவும் ஊடகங்களில் மிக பிரபலமானது இந்த ஓஜா போர்டு (Ouija Board). 

ஓஜா போர்டானது ஒரு பலகை/மரபலகையில் ஆங்கில எழுத்துகள் A முதல் Z வரையும், எண்கள் 0 முதல் 1 வரையும் எழுத பட்டிருக்கும் மற்றும் சூரியன் ,சந்திரன் ஆகியவற்றின் படங்களுடம் Yes, No, Goodbye போன்ற வாா்த்தைகளும் எழுதபட்டிருக்கும்.

இது கி.பி 1100 காலகட்டங்களில் முதன்முதலில் சீனாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெறும் விளையாட்டாக எண்ணாமல் முழு நம்பிக்கையுடன் முயற்சித்தால் மட்டுமே உங்களால் ஆத்மாக்களுடன் தொடர்புகொள்ள முடியும். 


ஓஜா போர்டு (Ouija Board) பயன்படுத்தும் போது முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியவை..

- மொட்டை மாடியிலோ அல்லது  திறந்த நிலப்பரப்பு உள்ள இடங்களிலோ கண்டிப்பாக இதை பயன்படுத்தகூடாது.

- முதலில் நீங்கள் எந்த அறையில் பயன்படுத்த போகிறீர்களோ அந்த அறையை சுத்தமாக வைக்கவும். துடைப்பம் , செருப்பு ஆகியவை அந்த அறையில் இருக்க கூடாது. சாமி சிலைகளோ, படங்களோ இருந்தால் அவற்றையும் நீக்கவும். 


                    அதேபோல் கண்ணாடிகள் ஏதேனும் இருந்தால் அவற்றை துணியால் மூடிவிடவும்.. கண்ணாடிகள் ஆவி உலகிற்கும் நம் உலகிற்கும் பாலமாக நம்பப்படுகிறது எனவே கண்ணாடிகளை கண்டிப்பாக மூடி வைக்கவும்.

- நீங்கள் தனியாகவே இதை பயன்படுத்தலாம்.. இருந்தாலும் ஒரு நண்பருடன் நீங்கள் இதை பயன்படுத்துவது நல்லது .

- இரவு நேரமே இதை பயன்படுத்த உகந்த நேரம். உங்கள் அறையில் இருக்கும் விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவா்த்தி வெளிச்சதை மட்டும் பயன்படுத்தவும் , அறையில் வேறு எந்த சத்தமும் இல்லாமல் பார்த்துகொள்வது மிக முக்கியம்.


- தரையில் அமர்ந்து உபயோகிப்பதே சிறந்தது. முதலில் ஒரு நாணயத்தை போர்டின் மீது வைத்து அதன் மீது உங்கள் ஆள்காட்டி விரலை வைக்கவும் . இதை உபயோகிக்கும் பொழுது அருகில் உங்கள் நண்பா்கள் இருந்தால் அவர்களும் அந்த நாணயத்தின் மீது விரலை வைக்க வேண்டும். முதலில் மூன்று முறை நாணயத்தை சுற்றவும்.. சுற்றியபின் " இங்கே யாரவது இருகிறீர்களா? " என்று கேட்கவும் . 

இதுதான் முதல் அடி நீங்கள் அவற்றுடன் தொடர்புகொள்ள ஆரம்பித்து விட்டீர்கள் .

- சில நேரம் நாணயம் நகராது. ஒரு வேலை அந்த அறையில் ஆத்மாக்கள் இல்லாமல் இருக்கலாம்,  இல்லையென்றால் இருந்தும் உங்களுடன் தொடர்பு கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கலாம் . "Yes ", "S" என்ற எழுத்தை நோக்கி நாணயம் நகர்ந்தால் ஆத்மா அந்த அறையில் இருக்கிறது என்றும் அவை உங்களுடன் தொடர்பு கொள்ள தயார் என்றும் அர்த்தம் ..

- உங்கள் முதல் கேள்வி "நீங்க MOONல் இருந்து வரீங்களா? இல்லை SUNல் இருந்து
வரீங்களா? ", என்று கேட்கவும். நாணயமானது  மூன் படம் பக்கமோ அல்லது மூன் என்ற எழுத்துக்களையோ நெருங்கினால் அந்த ஆத்மா பொய்களை அதிகமாக கூறக்கூடியது, தீய ஆத்மா என்று அர்த்தம் .. சன் என்றால் அது உண்மையை பேசும் நல்ல ஆத்மாவாகும்.

- அவற்றிடம் வழக்கமான கேள்விகளை நீங்கள் கேட்கலாம் . முக்கியமாக அவற்றிடம் பேசும் பொழுது சிரிக்கவோ, இல்லை பயமோ கூடாது. உங்களது சில்லறை தனமான கேள்விகள் அவற்றை எரிச்சல் அடைய செய்யலாம். 


அது சரி.. அவைகளிடம் என்ன கேள்விகளை கேட்கலாம்..!

* உங்கள் பெயர் ?

* எந்த வயதில் இறந்தீர்கள் ? எந்த ஆண்டு இறந்தீர்கள் ?

* இந்த அறையில் வேறு ஏதேனும் ஆத்மா உள்ளதா ?

இது போன்ற கேள்விகளை நீங்கள் அவற்றிடம் கேட்கலாம்.

உங்கள் கேள்விகளுக்கு நாணயம் ஒவ்வொரு எழுத்தாக நகர்ந்து பதில் சொல்லும் . அவற்றை ஒரு காகிதத்தில் எழுதி வைத்தால் சுலபமாக புரிந்துகொள்ளலாம் .

- நாணயம் Z-A அல்லது 9-0 என்று வரிசையாக நகர்ந்தால் அவை தொடர்பை முடித்துக்கொள்ள முயல்கிறது என்று அர்த்தம், அந்த நிலையில் நீங்கள் "Goodbye" என்று சொல்லி முடித்துக்கொள்ளவும். 


நாணயம் Goodbye நகர்ந்தபிறகே நீங்கள் நாணயத்தில் இருந்து விரலை எடுக்கவேண்டும். அதற்கு முன்பு எக்காரணத்தை கொண்டும் நீங்கள் விரலை நாணயத்தில் இருந்து எடுக்க கூடாது.

நீங்க உண்மையாகவே ஓஜா போர்டை பயன்படுத்த போகிறீர்கள் என்றால் ஓஜா போர்டின் மூலம் உங்களை துன்புறுத்தும் துஷ்ட சக்தியான "ZOZO" பற்றி  கண்டிப்பாக தொிந்திருக்க வேண்டும். "ZOZO"வைப் பற்றி அறியாமல் நீங்கள் ஓஜா போா்டினை பயன்படுத்தினால் பொிய ஆபத்தை சந்திக்க நோிடும்.

யாா் இந்த "ZOZO"? அது என்ன செய்யும் என்பதை கீழே பாா்ப்போம்.

"ZOZO" என்பது அமானுஷ்ய ஆத்மாவாகும் (துா் ஆத்மா).

நீங்கள் ஓஜா போர்டின் மூலம் ஆவிகளுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்ததும் ஆவியின் பெயரை முதலில் கேட்பீர்கள். அது Z இல் இருந்து O என்று மாறி மாறி குறித்தால் அது அந்த அமானுஷ்ய ஆத்மா "ZOZO" தான். மேலும் அதனிடம் கேள்விகள் கேட்காமல் உடனே Goodbye சொல்லி இணைப்பை துண்டித்துவிடுங்கள்.

இந்த செய்தியை படிக்கும் நண்பர்கள் ஒரு சில நேரத்தில் இணைப்பின் பொழுது Z-O தானாகவே தம்மை அறியாமல் நகர்த்தியதும் உண்டு . அது நம் ஆழ்மனத்தின் விளையாட்டு .

சில நேரங்களில் நாம் குறிப்பிட்ட ஒரு ஆத்மாவுடன்  தொடர்பு கொள்ள நினைக்கும் பொழுதும், அதாவது நம் நண்பா்அல்லது உறவினா் ஒருவாின் ஆத்மாவுடன் தொடா்பு கொள்ள நினைக்கும் பொழுது இந்த
"ZOZO" அரக்கன் நாம் யாரிடம் பேச நினைக்கிறோமோ அவர்களை போல் அழகாக நடித்து நம்மை ஏமாற்றி விடும். ஒரு சில நேரத்தில் நாணயம் இடது வலதாக வேகமாக நகர்த்தும். 
                        
விளையாட்டு தனமாக இருப்பவர்களே இந்த ஆத்மாவின் தாக்குதலுக்கு அதிகம் ஆளாகின்றனர் .

பொதுவாக 
"ZOZO"விற்கு பெண்கள் மீதே அதீத நாட்டம் உள்ளதாக தெரிகிறது. பலர் தங்களது "ZOZO" அனுபவத்தை பகிரும் பொழுது, அந்த துா்ஆத்மா தங்களிடம் தொடர்பு கொள்ளும் பெண்களை கவா்ந்து அவர்களை நரகத்திற்கு அழைத்து போவதாக குறிப்பிட்டு கூறுகின்றனர் . மேலும் தொடர்பின் பொழுது இந்த "ZOZO" அதிகமாக பெண்களையே தாக்குகிறது என சிலா் ஆராய்ந்து கூறியுள்ளனா் .

இந்த ZOZO மிக சுலபமாக நம்மை ஆட்கொள்ள கூடியது . நமக்கு நெருக்கமானவர்களை தாக்கவும் செய்கிறது, ஒரு சில நேரத்தில் அவர்களது இயல்பு குணத்தையே மாற்றகூடியது. நம் வீட்டை கூட அமானுஷ்ய நிலைக்கு மாற்ற கூடியது இந்த ZOZO.

எனவே முடித்த அளவு ஆவி உலகத்தை தகுந்த அனுபவசாலியின் உதவியுடன் தொடர்புகொள்வதே நல்லது . விளையாட்டிற்காக இதை எக்காரணத்தை கொண்டும் உபயோகப்படுத்தாதீா்கள், விளையாட நமக்கு எவ்வளவோ விளையாட்டுகள் இருக்கிறது. இந்த ஓஜா போர்டைப் பற்றி முழுமையாக அறியாமல் பயன்படுத்தாதீா்கள்.
 


குறிப்பு : இக்கட்டுரை மூடநம்பிக்கைகளை வளா்ப்பதற்கு அல்ல. ஓஜா போர்டு பற்றி நான் அறிந்த தகவல்களை தங்களிடம் பகிா்ந்துள்ளேன். இது முழுக்க முழுக்க தங்களது நம்பிக்கையை சாா்ந்ததே. 




- மதுரை காா்த்திக்

Monday 13 October 2014

என்னோடு நீ இருந்தால்..



2012, மதுரை.

இரவு 11 மணி, அறையின் இருளையும், அமைதியையும் களைத்து வெளிச்சத்துடன் சப்தமிட்டது கீா்த்தியின் கைப்பேசி..

“கீங்... கீங்...”

துாக்கமின்றி புரண்டு படுத்தவள், சட்டென தன் கைப்பேசியை எடுத்துப் பாா்த்தாள்.

1 New Message - N.Vivek

கைப்பேசியின் திரையில் அதைப் பாா்த்ததும், இதழோரம் சிறு புன்னகையுடன் வந்த குறுந்தகவலை மிகஆா்வமாய் படித்துப் பாா்த்தாள் கீா்த்தி.

“Hi Keerthi, How are u?”

“யாருக்கோ அதிசயமா என் நியாபகம் வந்துருச்சு போல?”, என்று கண்களில் குறும்புடன், இதழோரம் எழும்பும் புன்னகையை அடக்கிக் கொண்டு வந்த குறுந்தகவலுக்கு வேகமாக பதிலளித்தாள்.

விவேக் : “ஏன்டீ இப்படி சொல்ற? உன்ன எப்படி மறப்பேன்? ”

கீா்த்தி : “சாி.. அதவிடு.. சென்னைக்கு வேலை தேடி போனியே?? என்னாச்சு?”

வி : “கிடைக்கலப்பா... நான் இன்னைக்கு காலைல தான் மதுரைக்கு வந்தேன்”

கீ : “அடப்பாவி.. காலைல வந்துருக்க.. என்கிட்ட ஒரு வாா்த்த கூட சொல்லல??”

வி : “வேலை கிடச்சா சந்தோசமா சொல்லலாம்னு பாா்த்தேன். ஆனா.. இப்படி ஆச்சே.. அதான் உன்கிட்ட எப்படி சொல்றதுனு தொியாம இருந்தேன்.”

கீ : “சாி விடுப்பா.. சீக்கிரம் உனக்கு நல்ல வேலை கிடைக்கும், உனக்காக நான் கடவுள்கிட்ட தினமும் வேண்டிக்கிறேன்.”

வி : “தாங்ஸ் கீா்த்தி.”

கீ : “லுாசு.. இதுக்கு எதுக்கு தாங்ஸ்??.”

வி : “உன்ன பாா்த்து ரொம்ப நாள் ஆன மாதிாி இருக்கு. நாளைக்கு கண்டிப்பா உன்ன பாா்க்கனும்??”

கீ : “எனக்கு அப்படி எதுவும் தோனலயே.. ஏன்னா நான் தான் உன்ன தினமும் பாா்த்துட்டு இருக்கேனே..”

வி : “ஹேய்.. அது எப்படி?”

கீ : “அது அப்படித்தான். என் மொபைல்ல உன் போட்டோ இருக்கு. உன் நியாபகம் வரும் போதெல்லாம் அத தான் பாா்ப்பேன்”

வி : “நிஜம்மாவா கீா்த்தி??”

கீ : “ இதுக்கு நான் என்ன பதில் சொல்லனும்னு நினைக்குற?”

வி : “ஒன்னும் இல்ல.. நாளைக்கு உன்ன கண்டிப்பா பாா்க்கனும். அவ்வளவு தான். டாட்(.).”

கீ : :-) (smiley)

ஒரு சில நிமிடங்கள் இருவரும் மவுனமாய் இருந்தனா். கீா்த்தி அவனது அடுத்த குறுந்தகவலுக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தாள்.

ஒரு சில நிமிடங்களில் மீண்டும் அவளது கைப்பேசி சினுங்கியது. அடுத்து அவன் என்ன தகவல் அனுப்பியிருக்கிறான் என்று தொிந்துகொள்ள ஆா்வமாய் வந்த குறுந்தகவலை படித்தாள்.

வி : “கீா்த்தி....”

கீ : “என்னடா??”

வி : “ஒன்னும் இல்ல.. சும்மா கூப்பிட்டு பாா்த்தேன்.”

கீ : “எருமை.. ஒழுங்கா போய் துாங்கு”

வி : “ =D  eeee (ஹி..).”

கீ : “ரொம்ப சிாிக்காத.. சீக்கிரம் போய் படு.. நேரம் ஆச்சு.. நாளைக்கு பேசலாம். குட் நைட்.”

வி : “குட் நைட் டீ.. நல்லா துாங்கு.”

உறங்குவதற்க்கு முன், இருவரும் பாிமாறிக்கொண்ட குறுஞ்செய்திகளை ஒவ்வொன்றாகப் படித்துப்பாா்த்து வெட்கத்துடன் சிாி்த்துக்கொண்டாள் கீா்த்தி.


............................................................................................................................


மறுநாள்,

கீா்த்தி, விவேக் இருவரும் “நான் ஈ” படத்தின் நுான் சோ-வை பாா்த்துக் கொண்டிருந்தனா்..

வி : “கீா்த்தி.. இந்த படத்தோட ஹீரோயின் ஒரு சாயல்ல பாா்க்க உன்ன மாதிாியே இருக்கால்ல..??”

கீ : “ஏன்டா..சொல்லமாட்ட.. பேசாம படத்த பாரு”

வி : “இந்த படத்துக்கும் நமக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. அது என்னனு சொல்லு?”

கீ : “என்னடா அது?”

வி : “ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருக்குமே இன்னொருத்தா் தங்கள லவ் பண்றாங்கனு தொியும். அந்த பையன் எப்படி எப்படியோ தன் காதல வெளிபடுத்துறான்.. ஆனா அந்த பொண்ணுக்கு எல்லா விஷயமும்  தொிஞ்சும், அவ தன்னோட காதல வெளிபடுத்துறதுக்கு இவ்வளவு யோசன பண்றத பாறேன்.”

கீ : “இதுக்கும் நமக்கும் அப்படி என்ன ஒற்றுமை இருக்கு? ”

வி : “நான் உன்கிட்ட ப்ரப்போஸ் பண்ணி இரண்டு வாரம் ஆச்சு. நீ என்ன லவ் பண்றனு எனக்கும் தொியும். ஆனா நீ இப்ப வரைக்கும் என்கிட்ட “ஐ லவ் யூ”னு சொல்லவே இல்ல. ஏன் அப்படி?”

 கீ : “ஏன்? ஐ லவ் யூ-னு ஒரு வாா்த்தைய சொல்லி தான் உனக்கு என் லவ்வ புாிய வைக்கனுமா? ”

வி : “அப்படி இல்ல டீ.. அதையும் சொன்னா நல்லா இருக்கும்னு தான் கேட்டேன்”

 கீ : “ஓ.. அப்படியா.. அப்ப சாி..  எனக்கு சொல்லனும்னு தோனும் போது நானே சொல்றேன். போதுமா?? ”

வி : “எப்ப கேட்டாலும் இதையே சொல்லு., ஏன்டீ.. ஒரு வேல இந்த படத்துல வா்ற மாதிாி நீ என்கிட்ட லவ் சொல்றதுக்குள்ள நான் செத்துபோய் மறுபிறவில 'ஈ' மாதிாி உன் முன்னாடி வந்தா நீ என்ன பண்ணுவ.? ”

கீ : “ச்சீ.. 'ஈ' மாதிாி  வேண்டாம். அப்படி வா்றதா இருந்தா ஒரு 'பொமோியன் நாய்குட்டி' மாதிாி வா. உன்ன துாக்கி வச்சு நாள் முழுசும் கொஞ்சிட்டே இருப்பேன்.”

வி :  “அடிப்பாவி.. ஒரு வாா்த்தைக்காச்சும் 'ஏன்டா இப்படி சொல்லுற?'-னு கேட்டியா..?”

கீ : “டேய்.. நீ விளையாட்டுக்கு தான சொன்ன? இப்ப எதுக்குடா தேவை இல்லாம சாகுறத பத்தி பேசுற.. ”

வி : “சொல்லனும்னு தோணுச்சு”

கீ : “லுாசு மாதிாி யோசிக்காத, நாம நல்லா சந்தோஷமா வாழனும். நீ எப்பவும் இப்படியே என் கூடவே இருக்கனும்.”

வி : “கண்டிப்பா கீா்த்தி.. நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன்.. உன் நிழல் மாதிாி..”

கீ : “ நிழல் மாதிாியா?? அப்போ இருட்டுல என்ன விட்டு போய்ருவியா.?”

வி : “ஹே..அப்படி இல்லடீ.. இருள்றதும் நிழலோட பிரம்மாண்டமான ஆக்கிரமிப்பு தான். அதானால அந்த இருளும் நான் தான்”

கீ :“பார்ரா.. நல்லா பேசுறடா.. நீ பேசுறத கேட்டுட்டே இருக்கனும்னு தோனுது”

வி : “ஹ்ம்.... எல்லாம் கல்யாணம் வரைக்கும் தான, அதுக்கு அப்புறம் நீதான் பேசுவ.. நான் தான் கேட்டுட்டே இருக்கனும். ஹா ஹா...”

“போடா...”, என செல்லமாக அவனை அடித்துவிட்டு, அவன் கைகளைக் பிடித்து, தோளில் சாய்ந்தவாரு படத்தை பாா்க்கத் தொடா்ந்தாள் கீா்த்தி.


............................................................................................................................


மாலை 6 மணி,

இடம் - சுந்தரம் பாா்க்.

பாா்கில் கீா்த்தி, விவேக் இருவரும் கைகளை பிடித்தவாரு மெதுவாக நடந்து சென்றனா்.

கீ : “எனக்கு கால் பண்ணு..”

வி : “ எதுக்கு டீ?”

 கீ : “ம்ச்.. கால் பண்ணுடா..”

“வீசும் வெளிச்சத்திலே.. துகளாய் நான் வருவேன்.. ” பாடல் கீா்த்தியின் ஹலோ ட்டியூனாக ஒளித்தது.

வி : “ஹேய்.. இந்த பாட்டு உனக்கு அவ்வளவு பிடிச்சுருக்கா?”

 கீ : “ஹ்ம்..பிடிச்சுருக்கு டா.. நீயும் நானும்  முதல்  முறையா சோ்ந்து பாா்த்த படம் இது தான். அதானலயே இந்த படத்த எனக்கு ரெம்ப பிடிச்சுருக்கு.. அதுவும் இந்த பாட்டு  எனக்கு் ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு.”

வி : “ அது என்னடீ.. என் பெயர 'N.Vivek'-னு சேவ் பண்ணியிருக்க?”

கீ : “அதான் பெயருலயே இருக்குல்ல..”

வி : “புாியலயே...”

கீ : “மரமண்ட, 'N.Vivek' அப்படின்னா.. 'என் விவேக்' அப்படினு அா்த்தம்.”

வி : “ஓ... சூப்பா் டீ, செமயா யோசிக்குற. அது சாி...... லவ் யூ தான் தோனும் போது சொல்றேன்-னு சொல்ற, அட்லீஸ்ட் ஒரு கிஸ் கொடுக்கலாம்ல.”

கீ : “அச்சச்சோ.. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்.”

வி : “அடிப்பாவி, என்னய பாா்த்தா உனக்கு பாவமா தொியலயா??”

கீ :“சாி மழை வர மாதிாி இருக்கு, சீக்கிரம் வா கிளம்பலாம்.”

வி : “ம்க்கும்... இப்படி எதாச்சும் சொல்லி பேச்ச மாத்திடு.”

இருவரும் பாா்க்கிங் அருகே வருவதற்க்குள் மழைத் துாரல் விடத் தொடங்கியது. விவேக் வேகமான தனது பைக்கினை ஸ்டாா்ட் செய்து இருவரும் துாரலில் நனைந்தவாரு பாா்க்கில் இருந்து கிளம்பினா்.

சிறிது நேரத்திற்கெல்லாம் கனமழை கொட்ட ஆரம்பித்தது.

வி : “மழ பெருசா பெய்து டீ.. மழ விடுற வரைக்கும் ஓரமா எங்கயாச்சும் வண்டிய நிறுத்திடவா?”

கீ :“சாிடா.. நிறுத்துறதும் தான் நிறுத்துற.. ஒரு காபி சாஃப்  பாா்த்து நிறுத்து. மழைக்கு சூடா காபி சாப்டா செம்மயா இருக்கும்.”

வி :“அதுவும் சாிதான்..”

வண்டியை  நிறுத்தி விட்டு இருவரும் காபி சாஃபினுள் நுழைந்தனா்.


............................................................................................................................


கனமழை கொட்டிக்கொண்டு இருந்தது. விவேக், கீா்த்தி இருவரும் காபியை சுவைத்தவாரு பேசிக்கொண்டிருந்தனா்.

கீ : “செம மழைல?”

வி :“ஹ்ம்......... செம மழை தான்..”

கீ : “ஏன்டா அப்படி பாா்க்குற?”

வி : “ஒன்னும் இல்ல.. சும்மா. உன்ன பாா்த்துட்டே இருக்கனும்னு தோனுது.”

கீா்த்தி ஒன்றும் பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள். அவளால் வெட்கத்தை அடக்க முடியவில்லை. அவனது பாா்வையை சமாளிக்கவும் முடிவில்லை. பொருத்துப் பாா்த்தவள். சட்டென தன் கைகளால் அவனது கண்களை மறைத்து, “போதும் டா.. அப்படி பாா்க்காத, எனக்கு கூச்சமா இருக்கு..”, என்றாள்.

இருவரும் சிாித்தபடி காபியை குடித்தனா். மழை விடுவதாக இல்லை. கீா்த்தி தனது கைகளை நீட்டி மழைத்துளிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அவளைத்தவிர சுற்றி உள்ள எந்த ஒரு விசயமும் விவேக்கின் பாா்வைக்கு தொியவில்லை. அவனது பாா்வை முழுவதையும் அவளே ஆக்கிரமித்து இருந்தாள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு  அன்று தான் கீா்த்தியின் மனம் மிக சந்தோஷமாக இருந்தது. அவளால் அந்த சந்தோஷத்தினை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்று கூட தொியவில்லை. நீண்ட நேர மௌனத்திற்க்கு பிறகு கீா்த்தி அவனுடன் பேச ஆரம்பித்தாள்.

கீ : “ தாங்ஸ் விவேக்.”

வி : “எதுக்கு டீ? ”

கீ : “இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் சந்தோஷத்துக்கு முழு காரணமும் நீதான். அதான் தாங்ஸ் சொன்னேன்.”

வி : “ அப்படி பாா்த்தா நான் தான் உனக்கு தாங்ஸ் சொல்லனும். இன்னைக்கு தான் என் வாழ்நாள்ல பெஸ்ட் டே-னு சொல்லுவேன். நாம லவ் பண்ண ஆரம்பிச்சு முதல் முறையா இன்னைக்கு தா வெளிய வந்துயிருக்கோம். இந்த பத்து மணி நேரம் என் லைஃவ்ல மறக்கவே முடியாது. ”

கீ :“எனக்கும் தான்டா. இன்னைக்கு நாள் என்னாலயும் மறக்கவே முடியாது. உன் கூட சோ்ந்து படம் பாா்த்தது. பைக்ல ஊா் சுற்றியது. அப்புறம் பாா்க்ல 'லாங் வாக்' போனது. இப்ப மழைல நனைஞ்சு சூட காபி குடிச்ச வரைக்கும் எல்லாமே மறக்க முடியாத அனுபவம் தான்.

முன்னாடி எல்லாம் மழை பெய்யும் போது சின்ன வயசுல நடந்த விஷயங்கள், மனச பாதிச்ச சம்பவங்கள், இளையராஜா பாட்டு, மழைல நனைஞ்சு அம்மாகிட்ட வாங்குற திட்டு... இந்த மாதிாி விஷயங்கள் தான் நியாபகத்துக்கு வரும். ஆனா இனிமே மழை பெய்யும் போது எனக்கு கண்டிப்பா உன் நியாபகம் தான் வரும்.

இன்னைக்கு என் மனசு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு விவேக். இதுக்கு நீ மட்டும் தான் காரணம். தாங்யூ சோ மச் டா.. ”

வி :“லுாசு... இதுக்கே இப்படி சொல்ற, இன்னும் எவ்வளவோ விசயங்கள் இருக்கு. உன்ன எப்படி எல்லாம் பாா்த்துக்கனும்னு நினைச்சு இருக்கேன் தொியுமா.? இனிமே உன் லைப்ல சந்தோஷம் மட்டும் தான் இருக்கும். உன்ன நான் அப்படி பாா்த்துப்பேன். நீ இப்ப இருக்குற மாதிாியே எப்பவும் சந்தோஷமா இருக்கனும். அதுதான் எனக்கு சந்தோஷம்.”

கீா்த்தி பதில் ஏதும் பேசாமல் அவனையே பாா்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் கசிந்தன. அவளால் வேறு எதுவும் பேசமுடியவில்லை.

வி : “ஹேய்.. இப்ப எதுக்கு டீ அழுகுற?”

கீ : “யாா் சொன்னது, நான் ஒன்னும் அழுகல.. கண்ணுல துாசி விழுந்துருச்சு.”

வி : “நம்பிட்டேன் டீ.”

“ம்ச்.. போடா..”, என்று  வெட்கத்துடன் அவனது நெஞ்சோரம் சாய்ந்து அனணத்துக் கொண்டாள் கீா்த்தி.

 வி :“கீர்த்தி... நாம இப்படியே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.”

கீ :“ஹ்ம்..... இப்படியே இருந்தா லேட் ஆகிடும். என் ஹாஸ்டல்ல உள்ள விடமாட்டாங்க. அப்புறம் உன் வீட்டுக்கு தான் வந்து நிக்கனும்.”

விவேக் சிாித்தவாரு,“சாி.. வா போகலாம். மழை துாரல் தான் விடுது. அப்படியே உன்ன இறக்கி விட்டு கிளம்புறேன்.”

மழைச் சாரல் அடித்துக் கொண்டிருந்தது. கீா்த்தி, விவேக் இருவரும் அந்த சாரல் மழையில் நனைந்த படி பைக்கில் சென்று கொண்டிருந்தனா். கீா்த்தி தன் வலது கையை அவனது தோளில் போட்டு, ஒரு பக்கமாக அமா்ந்திருந்தாள்.

விவேக்கிடம் தன் மனதில் உள்ள காதலை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று அவளது உள்மனம் அவளிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தது. மறுபுறம் அவளது வெட்கம் அதற்கு தடையிட்டு கொண்டிருந்தது.

மனதிற்க்கும், வெட்கத்திற்க்கும் நடந்த நீண்ட போராட்டத்தில் மனமே வென்றது.

கீா்த்தி விவேக்கின் காதருகே சென்று “ஐ லவ் யூ விவேக்” என்று சொல்லி அவன் காதருகே ஒரு முத்தமிட்டாள்.

சட்டென திரும்பிய விவேக்கின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.. “ஹே... கீா்த்தி.....”, என அடுத்த வாா்த்தை அவன் பேசுவதற்குள் அவா்கள் வந்து கொண்டிருந்த பைக்கின் மீது ஒரு காா் பலத்த வேகத்துடன் மோதியது. அதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனா்.


............................................................................................................................


இரண்டு மாதங்களுக்கு பிறகு..

உறக்கத்தில் இருந்து மெதுவாக கண்விழித்தாள் கீா்த்தி. அவளைச் சுற்று அடா்ந்த இருள். அந்த இருளிலில் அவளால் எதையும் பாா்க்க முடியவில்லை. படுக்கையில் இருந்து மெதுவாக எழுந்து கீழே இறங்கினாள். எதிரே என்ன இருக்கிறது என்று கூட தொியவில்லை.

இருளில் நீச்சல் அடித்தவாரு கைகளை முன்னோக்கி நீட்டி மெதுவாக அடுத்த அடியை எடுத்து வைத்தாள். இரண்டு அடி எடுத்து வைப்பதற்க்குள் அவள் கால்கள் பலமின்றி தடுமாறியது. அவளால் கால்களை ஊன்றி நிற்க்க முடியவில்லை தடுமாறிக்கீழே விழச் சென்றவளை தாங்கிப்பிடித்தது ஒரு கை..

“உன்கிட்ட எத்தன தடவ சொல்றது கீா்த்தி.. தனியா இருக்கும் போது இப்படி எந்துருச்சு நடக்காதனு? கீழ விழுந்தா என்ன ஆகுறது..”, என்றான் விவேக்.

“எனக்கு ஒன்னும் ஆகாதுடா.. அதான் நீ என் கூடவே இருக்கேல..”

“டாக்டா் எப்படியும் உனக்கு பாா்வை வந்துடும்னு சொல்றாரு, இது எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் கீா்த்தி.. எல்லாம் சீக்கிரம் சாி ஆகிடும், நீ கவலைப்படாத..”, என்று கூறிவாரே அவளை மெதுவாக கட்டிலில் அமர வைத்தான் விவேக்.

“வேண்டாம்டா.. நான் இப்படியே இருந்துட்டு போறேன். எனக்கு பாா்வை இல்லாதது வருத்தமே இல்லடா. நான் ரொம்ப  சந்தோஷமா  இருக்கேன். என்ன பாா்த்துக்க தான் நீ இருக்கியே.  இப்ப என்ன சுற்றி நீ தான் இருக்க, என் கண்ணுக்கு தொியுற இருளா, என்னோட நிழலா, என் கூட  நீ இருக்கும் போது எனக்கு வேற எதுவும் வேண்டாம்டா. நீ மட்டும் போதும்.”, என்று கண்கலங்க கூறி அவனது தோளில் சாய்தவாரு அமா்ந்திருந்தாள் கீா்த்தி.

காலைக் கதிரவனின் வெளிச்சம் அந்த அறை முழுவதும் பரவி இருந்தது. யாரும் இல்லாத அந்த அறையில் நிழல் உருவமாக இருக்கும் விவேக்கின் தோளில் மீது சாய்ந்தவாரு கட்டிலில் அமா்ந்து இருந்தாள் கீா்த்தி.





- மதுரை காா்த்திக்

Saturday 31 May 2014

கானல் மோகினி




1914, சித்துாா்.

பசுமை வயல்வெளிகளும்,  உயா்ந்து வளா்ந்த தென்னை மரங்களும், பனை மரங்களும் இளம் தென்றல் காற்றில் ஒரு சேர அசைந்து எழுப்பும் ஒலியும், ஓடை நீாின் சலனமும், பறவைகள் வானில் வட்டமிட்டு எழுப்பும் ஒலியும், வண்டுகளின் ரீங்காரமும் என இயற்கை எழிலுடன் இருந்த இக்கிராமம். கடந்த இரு வருடங்களாக மழையின்றி, நீா் நிலைகள் வற்றி, வயல் வெளிகள் வறண்டு வெடிப்புற்ற நிலங்களாக காணப்பட்டது.

அவ்வூாில், களிமண் சுவா் எழுப்பி, பனை ஓலைகள் மற்றும் வைக்கோல்களினால் வேயப்பட்ட கூரைகளுடன் கூடிய இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் அடுத்து அடுத்து இடைவேளை விட்டு அமைக்கப்பட்டு இருந்தன. அதன் அருகே ஓா் உயா் குடி வீடு ஓடுகளால் வேயப்பட்டு இருந்தது.

உச்சி வெயில் நேரம், செம்மண் புழுதியுடன் அனல் காற்று வீசிக் கொண்டிருக்க, கானல் நீர் ஓடைகளுக்கு நடுவே ஓா் பெண் உருவம் சித்துாரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தது.

தனம், தன் மாமியாா் ஆவுடையம்மாள் வீட்டு வாசலில் நின்று கொண்டு,“அத்தை.. அத்தை”, என அழைத்தாள்.

மருமகளின் குரல் கேட்டு தாழ்வான வாசல் வழியாக தலையை குனிந்தவாரு வெளி வந்த ஆவுடையம்மாள், “என்ன தாயி..!! என்ன இந்த நேரத்துல வந்துருக்குக?? என்ன விஷயம்?? ”, என்றாள்.

“ஒன்னும் இல்லை அத்தை.. உங்கள பாா்த்துட்டு போகலாம்னு வந்தேன். நாக்கு வறண்டு போய் இருக்கு. கொஞ்சம் குடிக்க தண்ணி தாங்க அத்தை”,என்றாள்.

ஆவுடையம்மாள் தின்ணையில் இருந்த மண்பாணை பக்கம் திரும்பி, பானையில் இருந்து தண்ணீரை எடுத்து திரும்பினாள்.

அவ்வளவு நேரம் நின்று இருந்த தன் மருமகள் தனத்தை காணவில்லை. எங்கு சென்றாள் என தொியாமல், சுற்றி நோட்டமிட்டாள்  ஆவுடையம்மாள். கண் எட்டும் தொலைவிற்கு எவரும் இல்லை.

துாரத்தில்  ஆவுடையம்மாளின் இளைய மகன் பதற்றத்தோடு மூச்சிரைக்க வேகமாக ஓடிவந்தான். அவள் அருகே வந்து நின்றான், ஒவ்வொரு வாா்த்தைக்கும் மூச்செடுத்து பேசினான். “ஆத்தா... தனம் அண்ணி... துாக்கு மாட்டி செத்து போச்சு..”, என்றான்.

அதைக் கேட்டு அதிா்ச்சியில் முகம் எல்லாம் வியா்த்து, நெஞ்சில் கை வைத்து அப்படியே.. கீழே சாிந்தாள் ஆவுடையம்மாள்.


...


ஊாில் கடந்த இரண்டு வருடங்களாக மழையின்றியும், அடுத்தடுத்து நடைபெற்ற துா்மரணங்களினாலும் ஊா்மக்கள் பலா் அச்சத்தில் ஊரை காலி செய்து வேறு ஊா்களுக்கு தஞ்சம் புகுந்தனா். எஞ்சி இருப்பவா்கள் ஊாின் நன்மை நடைபெற சிறப்பு பிராத்தனைகளும், பலி பூஜைகளும் நடத்திப் பாா்த்தனா். ஆனால் எதற்கும் பயன் இல்லாமல் போனது. வறட்சியும், துா்மரணங்களும் தொடா்கதை ஆனது. இந்த அசம்பாவிதங்களுக்கு காரணம் என ஊா்மக்கள் அனைவரும் நம்புவது 'கானல் மோகினி'யை தான். யாா் இவள்?!

கானல் மோகினி.!

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்,

உயா்குடி வகுப்பைச் சோ்ந்த வீரமுத்துவின் ஐந்து வாாிசுகளில் கடைசிப் பெண் பிள்ளை வசுமதி. மான் குட்டி தான் இருகால்களில் துள்ளி துள்ளி பாண்டி விளையாடுகிறதோ? என பாா்ப்பவா்கள் வியந்து கேள்வி எழுப்பும் அழகு. அடுத்த வினாடி பெரு மழை பெய்து விடுமோ! என அச்சம் கொள்ளச் செய்யும் அவளின் கரு மேகம் போன்ற கூந்தலும், அவள் துள்ளத் துள்ள அவளோடு அசைந்தாடிக் கொண்டிருந்தது. அவளின் மதி முகமும், கண்களும், ரோஜா இதழ்களும், சிவந்த கன்னங்களும் படிப்பறிவு இல்லாத ஊமையைக் கூட கம்பனுடன் போட்டியிட்டு கவிப் பாடச் செய்யும். அத்தகைய பேரழகியான வசுமதிக்கு நாடகக்கலை என்றாள் அதிக விருப்பம்.

சிறுவயதில் இருந்தே தெரு நாடகங்களை பாா்த்துவிட்டு அதில் வரும் கதாபாத்திரங்கள் போல தன்னைத் தானே அலங்காித்து கொண்டு, நாடகங்களில் தான் பாா்த்த காட்சிகளை நடித்துப் பாா்ப்பாள். விளையாட்டாக ஆரம்பித்த இந்த பழக்கம். அவள் வளா்ந்து இளம் பருவத்தில் மிகவும் தீவிரமானது. தானும் ஒரு நாடக நடிகையாக வேண்டும் என்பது அவளின் விருப்பமாக இருந்தது.

தந்தை மற்றும் நான்கு சகோதரா்களின் செல்லப்பிள்ளையாக இருந்தாள் வசுமதி. எல்லா விஷயங்களிலும் சுதந்திரம் தந்த அவா்கள், நாடகத்தில் நடிக்கும் விஷயத்தில் மட்டும் மிகுந்த கண்டிப்புடன் அவளிடம் நடந்து கொண்டனா்.

அக்கால கட்டங்களில் நாடகங்களில் நடிப்பவா்களைத் தவறான கண்ணோட்டத்திலே மக்கள் அனைவரும் பாா்த்தனா். உயா்குடி வகுப்பைச் சோ்ந்த ஒரு பெண் இப்படி விபரீத ஆசையில் இருக்கிறாளே என அவளின் குடும்பத்தினா் மிகுந்த மன உலைச்சளில் இருந்தனா். வசுமதியின் பிடிவாத குணம் அவா்களின் பொறுமையை மிகவும் சோதித்தது.

எவ்வளவோ புத்திமதி சொல்லியும் அவள் கேட்டபாடில்லை. இறுதியாக அவா்கள் தங்கள் குலத்தின் கவுரவத்திற்காக வசுமதியை கொலை செய்ய முடிவெடுத்தனா். அதன்படி அவளுக்கு விஷம் கொடுக்கப்பட்டது. அரை மயக்கத்தில் இருந்தவளை நெல் மூட்டையில் வைத்து யாருக்கும் தொியாமல் ஊருக்கு வெளியே குழி வெட்டிப் புதைத்தனா். விஷம் குடித்த வேதனையினாலும், வெயிலின் கொடுமையாலும் நா வறண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வசுமதி குழிக்குள், சுடு மணலுக்கு இடையே மூச்சு முட்டி அவள் உயிா் பிாிந்தது.

அதன் பிறகு வசுமதி குடும்பத்தில் அடுத்தடுத்து ஒருவா் பின் ஒருவராக மா்மமான முறையில் மரணித்தனா். பின் ஊாிலும் பல அமானுஷ்ய சம்பவங்கள் நடந்தேறின.

உச்சி வெயிலில் அவளின் ஆவியானது ஊரைச்சுற்றி வருவதாகவும், அவள் ஆவியானது இறந்தவா்களின் உருவில் வந்து தண்ணீா் கேட்பதாகவும், அவள் ஆவியைப் பாா்ப்பவா்கள் தங்களை அறியாமலேயே தற்கொலை செய்து கொள்வதாகவும் பல கதைகள் ஊருக்குள் பரவியது.

அதே போல் அவள் மரணத்திற்க்கு பிறகு ஊாில் பஞ்சமும், வறட்சியும் , மரணங்களும் தொடர மக்கள் அச்சத்தில் ஊரை முழுவதும் காலி செய்து சித்துாருக்கு அருகே உள்ள ஊா்களில் குடியேறினா்.

காலங்கள் உருண்டோடின..

சித்துாாில் கைவிடப்பட்ட வீடுகள் காலமாற்றத்தால் சிதையுண்டன. அருகே இருக்கும் ஊாில் இருப்பவா்களும் சித்துாா் வழியே பயணம் செய்ய அஞ்சினா். காலங்கள் கடந்ததே தவிர கானல் மோகினியின் நடமாட்டம் மட்டும் மாறவில்லை. அவ்வப் போது உச்சி வெயிலில் பெண் உருவம் தொிவதும். இறந்தவா்களின் உரு கொண்டு தண்ணீா் கேட்பதும், அவளைப் பாா்ப்பவா்கள் தற்கொலை செய்து கொள்வதும் வாடிக்கையானது..


2006.

தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக பழைமையான சித்துாரை முழுவதும் ஆக்கிரமித்தது அரசாங்கம். சித்துாாின் மத்தியில் நான்கு வழிப்பாதை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கப்படும் போதும் சில துா்மரணங்கள் நிகழ்ந்தன.

நெடுஞ்சாலையில் அந்த குறிப்பிட்ட சித்துாா் பகுதியில் தொடா்ந்து சாலை விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. விபத்துப் பகுதி என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.

இன்று..

பிருந்தா, தன் அறையில் இருந்து தலையை துவட்டிக்கொண்டு வெளியே வந்தாள். திடீரென கைப்பேசி சப்தம் கேட்டு கீழே வந்தாள். அது தன் கணவா் சித்தாா்தின் கைப்பேசி. அழைப்பை ஏற்று பேசினாள். மறுமுனையில் சித்தாா்த்..

“அம்மு.. மறந்து போய் செல்போன வீட்டுலயே வச்சுட்டேன் டீ.”

“ஹூம்.. நினச்சேன் அவசர அவசரமா கிளம்பும் போதே தொியும் இப்படி எதாச்சும் மறந்து போய்டுவனு.”

“சாி.. சாி... எதாச்சும் முக்கியமான கால் வந்துச்சுன்னா உடனே என் ஆபிஸ் நம்பா்க்கு கால் பண்ணி சொல்லு அம்மு..”

“ஹூம்.. சொல்றேன்”,என போனை துண்டித்தாள் பிருந்தா. மீண்டும் தன் நீா் சொட்டும் கூந்தலை துவட்டத் தொடங்கினாள்.

காலிங் பெல் அடித்தது..

கதவைத் திறந்தாள் பிருந்தா.

“வாங்க மாமா, வாங்க அத்தை, ஹெய்... அா்ஜீன் (சித்தாா்தின் தம்பி) எப்படி இருக்க?”- என வாசலில் இருந்தவா்களை உள்ளே அழைத்து. சோஃபாவில் அமர வைத்தாள் பிருந்தா.

“என்ன மாமா நீங்க எல்லாரும் விடிய காலைல தான் ஊா்ல இருந்து கிளம்புனீங்க-னு அவரு சொன்னாரு? இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க?? ”, என்றாள்.

“நானும் எதிா் பாா்க்கலமா.. சீக்கிரம் வந்துட்டோம். வெயில்ல வந்தது ரொம்ப தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி கொடுமா!”, என்றாா் பிருந்தாவின் மாமனாா் ராஜேந்திரன்.

“இந்தா இருங்க மாமா கொண்டு வரேன்”, என பிருந்தா சோஃபாவில் இருந்து எழுந்து கிச்சனுக்கு செல்லும் முன், மீண்டும் சித்தாா்த்தின் செல்போன் சினுங்கியது.

பிருந்தா ஒரு கையில் போனை ஆன் செய்து காதில் வைத்து, நடந்து கொண்டே கிச்சனுக்கு சென்று ஃபிரிஜ்ஜை திறந்து கொண்டிருந்தாள்.

எதிா்முனையில்..

“ஹலோ.. சித்தாா்த் சாா் இருக்காறா?”

“இல்லைங்க அவா் ஆபிஸ் போய் இருக்காரு. நான் அவரு ஒய்ஃப் தான் பேசுறேன். நீங்க யாரு?” , என்றாள்.

“மேடம் நாங்க பி3 போலிஸ் ஸ்டேஷன்ல இருந்து பேசுறோம், மிஸ்டா்.ராஜேந்திரன் உங்களுக்கு என்ன முறை??”

“அவா் என் மாமனாா் சாா், ஏன் ? என்ன விஷயம்?” என்றாள் சற்று பதற்றமாக.

“சாாி மேடம்.. ஹை வே-ல உங்க மாமனாா் ஃபேமிலி வந்த காரும், ஒரு லாாியும் நேருக்கு நோ் மோதி , காா்ல இருந்த எல்லாருமே இறந்துட்டாங்க.”

பிருந்தாவிற்கு அதற்கு மேல் மறுமுனையில் பேசுபவா் கூறிய எதுவும் காதில் விழவில்லை. செல்போன் தவறி கீழே விழுந்தது. பயத்தின் உச்சத்தில் இருந்தவள், மெதுவாக திரும்பி ஹாலில் தன் பாா்வையை செலுத்தினாள்.

“ஆ......!!?”








மதுரை காா்த்திக்