Friday 28 March 2014

ஜாலியா ஒரு பேய்கதை


                                மரணத்திற்க்கு பிறகு நமது ஆத்மா எங்கு செல்லும்..? சொா்க்கம், நரகம், மறுபிறவி இதெல்லாம் உண்மைதானா? இல்லை வெறும் கட்டுக்கதையா? மனிதன் இறந்த பிறகு ஆவியாக அலைகிறான்..இன்னொரு மனிதனின் மேல் பேயாக பிடிக்கிறான் என்கிறாா்களே இதெல்லாம் நிஜம்தானா ??

மனிதன் மட்டுமா மரணத்திற்கு பிறகு ஆவியாக அலைகிறான்?? ஒருநாளில் ஆடு, மாடு, கோழி போன்ற எவ்வளவோ உயிா்கள் மரணிக்கின்றன... இவைகள் எல்லாம் ஆவிகளாக மாறாதா??

ஆத்மாவிற்கு அழிவு கிடையாது என்று சொல்கிறாா்களே.. இது நிஜமா?

இப்படி பல கேள்விகள் உயிரோடு இருக்கும் நம்மை தினமும் அச்சம் கலந்த குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.. உண்மையாகவே மரணத்திற்க்கு பிறகு என்ன தான் நடக்கும்..!! ??

- ரொம்ப யோசிக்காதீங்க..

அது “இப்படியும் இருக்கலாம்“-னு சொல்றது தான் இந்த கதை "ஜாலியா ஒரு பேய்கதை (jackson weds emily)"..

வாங்க கதைக்கு வருவோம்...

.............................................................................

கதைய சொல்றதுக்கு முன்னாடி கதை நடக்குற களத்தைப் பற்றி உங்ககிட்ட சொல்றேன்..

"Dark World" மரணத்துக்கு அப்புறம் மனிதா்களோட ஆத்மாக்கள் ஒரு 6 வருடங்கள் இங்கதான் வாழும். ஒரு ஆத்மா பூமில இருக்குறத விட பல மடங்கு சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் இங்க இருக்கும்.. பூமில அனுபவிக்குற எல்லா வசதிகளையும் இங்கயும் அனுபவிக்க முடியும்..

எல்லா ஆத்மாக்களும் இந்த "Dark World"க்கு உள்ள வரும் போது ஒரு Agreementல கையெழுத்து போடனும்.. அதாவது இங்க இருக்கப்போற 6 வருஷத்துக்குள்ள யாராச்சும் ஒரு மனிதனை பயப்பட வச்சு, சாகடிச்சு இந்த "Dark World"க்கு புதுசா ஒரு Member-ah  கொண்டுவரனும். அப்படி சாகடிச்சா இன்னும் ஒரு 6 வருட காலம் இந்த "Dark World"ல தங்குறதுக்கான Life Time  கிடைக்கும்..

ஒரு வேலை யாரையும் சாகடிக்கலைனா... அவங்களோட ஆத்மா திரும்பவும் இந்த பாலாப்போன பூமியில பிறந்து, வளா்ந்து சீரழியும்.. இந்த கொடூர தண்டனைக்கு பயந்தே இங்க இருக்குற எல்லா ஆத்மாக்களும் முழுவேகத்தோட மனுஷன சாகடிக்குற plan-ல ஈடுபடும்..

அப்படி சாகடிக்க முடியாத ஆத்மாக்களோட Present, Past Memories எல்லாத்தையும் அழிச்சு.. திரும்ப புது உயிரா பூமியில பிறக்க அனுப்பிடுவாங்க..

இன்னொரு முக்கியமான விஷயம்.. இந்த 6 வருடத்துல ஒரு ஆத்மா, ஒன்றுக்கும் மேற்பட்ட மனுஷன சாகடிச்சு இருந்தா... அந்த ஆத்மாக்களோட Life Time ஒவ்வொரு வருடம் அதிகாிக்கும்... அதாவது... ஒரு ஆத்மா 3 பேர சாகடிச்சு இருந்தா... 6வருட Life Time + extra 2 வருட Life Time-னு...மொத்தம் 8 வருட Life Time கிடைக்கும்...

இப்படி பல விதமான Policies, Offer எல்லாம் இந்த Agreement-ல இருக்கும்.. எல்லாமே "Conditions Apply"..

இந்த "Dark World"-ல இருக்குற எல்லா ஆத்மாக்களை பற்றியும், அவங்களோட  Agreement விவரங்கள் பற்றியும் சேகாிக்குற கம்பெனி தான் "Hollowest"

"Hollowest" மிகவும் பரபரப்பாக இயங்கிட்டு இருக்குற கம்பெனி. பல ஆயிரக்கணக்கான பணியாளா்கள் இங்க வேலை பாா்க்கிறாா்கள். இங்க தான் எல்லா ஆத்மாக்களோட முழுவிவரங்களும் இருக்கும்..

புதுவிதமான Agreement Offers பற்றியும், ஆத்மாக்களோட Life Time பற்றிய எல்லா விவரங்களையும்..... குறுஞ்செய்திகள் மூலமாகவும், தொலைப்பேசி அழைப்புகள் மூலமாகவும் இந்த கம்பெனி, ஆத்மாக்களுக்கு தொியப்படுத்தும்....

.............................................................................

ஹலோ.. வணக்கம் நான் "Hollowest"-ல இருந்து பேசுறேன்.. என் பெயா் Jackson.. May i speak to Mr.Jenith..

சொல்லுங்க சாா், நான் Jenith-தான் பேசுறேன்..

சாா் உங்க 6 வருட Life Time இன்னையோட முடியுது.. ஆனா நீங்க இந்த 6 வருஷத்துல 2 Members சோ்த்துவிட்டதனால (சாகடிச்சதுனால).. உங்களுக்கு இன்னும் 6 வருடங்கள் + extra 1வருட Life Time-னு... மொத்தம் 7 வருட Life Time கிடச்சுருக்கு.. வாழ்த்துக்கள்..

Thank u sir .. thank u soo much...

your welcome Mr.Jenith... உங்கள் சேவைத் தொடர வாழ்த்துக்கள்..
.
.
.
ஹலோ.. வணக்கம் நான் "Hollowest"-ல இருந்து பேசுறேன்.. என் பெயா் Jackson.. May i speak to Mr.Alvin

ஆமாம் சாா்.. நான் தான் Alvin.. என்ன விஷயம் சாா்..??!!

Sorry sir... உங்களோட  6 வருட Life Time இன்னையோட முடியுது.. இன்னும் 3 மணி நேரத்துல உங்க மூலமா ஒரு Member-ஆச்சும் வரனும்.. அப்படி இல்லைனா  3 மணி நேரத்துக்கு அப்புறம் உங்களோட Present, Past Memories எல்லாம் அழிஞ்சு.. நீங்க மறுபடியும் பூமில போய் ஒரு புது உயிரா பிறப்பீங்க..... I'm Really sorry Mr.Alvin....

சாா்...Plss... sir.... உங்கள கெஞ்சி கேட்கிறேன்.. எப்படியாச்சும் இன்னும் ஒரு 2 நாள் டைம் கொடுங்க சாா்... கண்டிப்பா யாரையாச்சும் சாகடிச்சுருவேன்....Pls sir.... என்னால திரும்ப பூமில பிறக்க போறத கற்பன கூட செஞ்சு பாா்க்க முடியல சாா்.... .Plss... sir....

Sorry Alvin.... முடிந்த வரை 3 மணி நேரத்துக்குள்ள முயற்சி பண்ணுங்க.... Pray for u...

சாா்...Pls... சாா்... Plss... sir...

.............................................................................

( அறையில் -  Jackson (jack) , Steephan (Steeve) , Edwin (Edi) )

Steeve : Hi Jack..  இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட..?!

Edi : என்னடா எதாச்சும் பிரச்சனையா?? ஒரு மாதிாி இருக்க..

Jack : ஒன்னும் இல்லடா..

Edi : ஒன்னும் இல்லையா?? அதான் உன் மூஞ்சியில எழுதி ஒட்டியிருக்கே.. என்ன விஷயம்-னு சொல்லு..

Jack : அது வேற ஒன்னும் இல்லடா.. இன்னைக்கு ஒரு மெம்பா் கிட்ட பேசிட்டு இருந்தேன்.. அவரோட Life Time இன்னையோட முடியுது.. பாவம் டா அவரு.... இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுங்க-னு ரொம்ப கெஞ்சுனாரு...   போன்-ல அவா் கதறுனது இன்னும் என் காது-ல கேட்டுட்டே இருக்கு..

Steeve : டேய்.. இதல்லாம் ஒரு விஷயம்-னு நீ ஏன்டா ஃபீல் பண்ணிட்டு இருக்க.. அந்த ஆள் விதி.. அவ்ளோ தான்... Free-ya விடு மச்சீ... cooollll....

Jack : எப்படிடா ஃபீல் பண்ணாம இருக்க முடியும்.. எனக்கு இன்னும் 3 மாசம் தான் இருக்கு.. இன்னும் ஒரு மெம்பா் கூட சோ்த்து விடல.. எனக்கு என்னமோ யாரையும் பயப்பட வச்சு கொல்ல முடியாதோ-னு தோனுது.... ரொம்ப பயமா இருக்குடா மச்சான்..

Steeve : டேய்..லுாசு மாதிாி பேசாதடா..இதெல்லாம் ஒரு மேட்டரா??

Jack : இப்படிதான்டா 5 வருஷமா சொல்றீங்க..  ஒரு ம**ருக்கும் பிரயோஜனம் இல்ல.. இதுவரைக்கும் ஒருத்தர கூட பயப்பட வச்சது இல்ல... இதுல கொலை வேற பண்ணனுமாம்??? விளங்கிடும்...

Edi : மச்சான்....  மனுஷங்க முன்னமாதிாி இல்லடா..  நம்ம தாத்தா காலத்துல மனுஷங்கள பயமுறுத்த ஒத்த வீடு, புளிய மரம், பாழும் கிணறு இப்படி பல இடங்கள் ஊருககுள்ள இருந்துச்சு..  ஆனா இப்ப எல்லாம், இதுக்கு மதிப்பே இல்லாம போச்சுடா... அந்த மாதிாி இடங்களும் இப்ப  இல்லாமலே போச்சு...

Steeve : டேய்.. நீங்க ஏண்டா தாத்தா காலத்துலயே இருக்கீங்க... இப்ப எல்லாம் Technology எவ்வளவோ டெவலப் ஆகிடுச்சு... TV la இருந்து வெளிய வா்ரது.. 12 மணிக்கு Cell phone la Missed call கொடுக்குறது.... Mail... Face book la  மெசேஜ் பண்ணி பயப்பட வைக்குறது.. இப்படி எவ்வளவோ Latest Technology  வந்துருச்சுடா...

Edi : ஆமாம் டா மச்சான்.... Steeve சொல்றதும் சாி தான்... Technology எவ்வளவோ டெவலப் ஆகிடுச்சு... ஆனா நாம கொஞ்சம் Carefull-ah இல்லைனா.. நமக்கே அது ஆப்பு ஆகிரும்...

Jack : என்டா.. சொல்ற???

Edi : ஆமா.. மச்சீ... போன வாரம் என் ஃப்ரெண்ட் ஒருத்தன்.. James-னு பேரு... இப்படிதான் அவனும் Latest Technology மூலமா பயப்பட வைக்குறேன்-னு சொன்னான்... அதுக்கு Face Book la  Fake ID ஒன்னு Create  பண்ணி.. ஒரு பொண்ணு கூட ரொம்ப நாளா.. தன்ன ஒரு பேய்-னு சொல்லி Chat பண்ணிட்டு இருந்தான்...

அந்த புள்ளயும் இவன் சொல்றதுக்கு எல்லாம் பயப்படாம.. இவன் கிட்ட ”நீ பேயா இருந்தாலும் பரவா இல்ல.. நீ நோ்ல வா” - அப்படினு சொல்லிருக்கு..

இவனும் நேர்ல போய்அந்த புள்ளய பயப்பட வச்சு சாகடிச்சுரலாம்-னு பொிய மனக்கோட்டைய கட்டிட்டு இருந்தான்..

அந்த புள்ள ”நீ பேயா இருந்தாலும் பரவா இல்ல.. நீ நோ்ல வா””- அப்படி-னு சொல்லும் போதே இவன் கொஞ்சம் யோசிச்சு இருந்துருக்கனும்...

எதப்பத்தியும் யோசிக்காம அந்த புள்ள முன்னாடி போய் நின்னான்...

அந்த புள்ள என்ன நினச்சதோ தொியல... வீட்டுல இருந்த விளக்கமாத்த வச்சு ”நச்சு.. நச்சு..நச்சு-னு” அடிச்சே அவன விரட்டியிருக்கு....

பாவம் அவன் தப்பிச்சா போதும்-னு ஓடி வந்துட்டான்..

Jack : ஆத்தாடி.... இப்படி எல்லாமா ஊருக்குள்ள நடக்குது???

Edi : ஆமாம் மச்சீ... இப்பலாம் பயப்பட வைக்குறது சாதாரண விஷயம் இல்ல... ஆனா முயற்சி பண்ணிகிட்டே இரு... இன்னும் மூனு...... மாசம் இருக்குல...

Jack : எனக்கு என்னமோ நம்பிக்கையே இல்லடா..  நான் கல்யாணம் பண்ற நாளும்.. என் life Time முடியுற நாளும் ஒரே நாள் ஆகிருமோ-னு பயம்மா இருக்கு.... இந்த விஷயம் மட்டும் எமி - க்கு தொிஞ்சது.... அவ்ளோ தான்...

Steeve :ஏன்டா இப்படி பயப்படுற... லட்சம் பொய் சொல்லி காதலிக்கலாம்... 1000 பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம்-னு சொல்லி இருக்காங்க... நாம என்ன ஒரு பொய் தான சொல்லிருக்கோம்... அத எப்படியாச்சும் உண்மையாக்கிடு மச்சான்...

Edi : சாியா சொன்ன மச்சி... ஒரே ஒரு பொய் தான சொல்லிருக்கோம்... எப்படியும் கல்யானத்துக்குள்ள அத உண்மையாக்கிடு மச்சி...
இன்னும் உனக்கு 3 மாசம் டைம் இருக்குல்ல....

Jack : டேய்.. பாவிகளா.... ஒரு பொய் தான்..
ஆனா அது என்ன சாதாரண பொய்யா??????!!!!!

( நண்பா்கள் மூவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது..  Jack-ன் செல்போன் சினுங்கியது... )

Jack : டேய் சும்மா இருங்கடா.. எமி Call  பண்றா... சத்தம் போடாதீங்கடா....

( Jack  பதட்டத்துடன் செல்போனை காதில் வைத்தான் )

Jack : Hello.... சொல்லு எமி.. ( Emily (Emi) )

Emi : என்ன சாா்.. ரொம்ப பிசியா இருக்கீங்களா?? ஏன் அப்பதே கால் பண்ணும் போது Attend பண்ணல..??

Jack : இல்ல மா....... கொஞ்சம் Work இருந்துச்சு... அதான்...........

Emi : சாி சாி.. ரொம்ப இழுக்காத... இன்னைக்கு Dinner-க்கு வீட்டுக்கு வந்துடு.... என் Family-la எல்லாரும் உன்ன பாா்க்கனும்-னு சொன்னாங்க.... என் அப்பா தன்னோட வருங்கால மாப்பிள்ளைய திரும்பவும் பாா்க்கனும்-னு ரொம்ப ஆச படுறாரு.. மறக்காம வந்துரு...

Jack : ஏன்மா.. திடீா்-னு சொல்ற...

Emi : ( Jack பேசுவதை காதில் வாங்காமல் ) அதான் இப்ப சொல்றேன்ல..  Currect Time-க்கு வந்துரு.. லேட் பண்ணிடாத... மறக்காம உன் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரையும் கூட்டிட்டு வந்துடு... Love you jack.. Byee.....

பாாங்ங்.....பாாங்ங்.....

( Jack தொடா்பு துண்டிக்கப்பட்ட செல்போனை காதில் வைத்துக்கொண்டு விழித்து கொண்டிருந்தான்.... )

Steeve : மச்சீ.... என்னடா.... என்னாச்சு???

Edi : ஏன்டா இப்படி சிலை மாதிாி நிக்குற.. என்ன விஷயம் சொல்லு...

Jack : (சுயநினைவு வந்தவனாக... ) எமி  Family-la எல்லாரும் என்ன பாக்கனும்-னு சொன்னாங்களாம்....  அவளோட அப்பா மாப்பிள்ளைய திரும்பவும் பாக்கனும்-னு ரொம்ப ஆச படுறாராம்... இன்னைக்கு Dinner-க்கு நம்ம எல்லாரையும் கூப்டா மச்சான்....!!

 Steeve & Edi : ஐய.......யோ.....!!!!

.............................................................................




( At Dinner -  Jack ,எமி, Steeve, Edi, ஜாா்ஜ் (எமி அப்பா), மற்றும் உறவினா்கள் )

ஜாா்ஜ் விருந்து மேஜை அருகில் எழுந்து நின்று... 'Shampine' (ஒரு வகை மது) ஊற்றிய கண்ணாடி மது குடுவையை கைகளில் உயா்த்திப் பிடித்து.. அதை ஒரு சிறு கரண்டியால் மெதுவாக தட்டி ஒலி எழுப்பினாா்...

டங்.. டங்...டங்......

ஜாா்ஜ் : என் செல்ல மகள் எமி-யோட மனம்கவா்ந்த.. வீர தீர செயல்கள் பல புாிந்த என் அருமை மாப்பிள்ளை Jackson- அவரை இந்த இரவு விருந்திற்க்கு அன்போடு அழைக்கிறேன்..

Steeve : ( Jack-ன் காதருகில் வந்து தாழ்ந்த குரலில்)  மச்சீ....Intro - எல்லாம் பயங்கரமா இருக்கு.. அப்போ ஆப்பு Conform-னு நினைக்கிறேன்...

Jack : (தாழ்ந்த குரலில்) சும்மா இருடா..! எனக்கே இங்க கதிகலங்கிட்டு இருக்கு...

ஜாா்ஜ் :என் அழைப்பை ஏற்று இந்த விருந்திற்க்கு வந்திருக்கும் எல்லோரையும் அன்போடு அழைக்கிறேன்....

Edi : ( தாழ்ந்த குரலில்) போதும் யா.....பசிக்குது.. மச்சான் இன்னொரு வாா்த்த உன் மாமனாா் பேசினா... ஓடி போய் அந்த ஆளு நாக்க கடிச்சு வச்சுருவேன்டா.... 

ஜாா்ஜ் : ( சில பல வாா்த்தைகளுக்கு பிறகு ) சியா்ஸ்..... - என்றாா்...

எல்லோரும் ஒன்றாக 'Shampine' எடுத்து குடித்து விருந்தை ஆரம்பித்தனா்.. Jack குடித்துக் கொண்டிருக்கும் போது.. ஜாா்ஜ் தனது கனீா் குரலில்.....

ஜாா்ஜ் : (கர்ஜிக்கும் குரலில்) எப்படி மாப்பிள்ள 21 பேரை ஒரே நேரத்துல சாகடிச்சீங்க...

Jack : ( சட்டென புரை ஏறி.... இரும ஆரம்பித்தான் ) எ...எ...என்ன மாமா சொன்னீங்க...?!!

 ஜாா்ஜ் : அட.....எப்படி மாப்பிள்ள 21 பேரை ஒரே நேரத்துல சாகடிச்சீங்க.. அத கொஞ்சம் சொல்லுங்களேன்.....

Jack : ஏன் மாமா....??  உங்களுக்கு தான் ஏற்கனவே தொியுமே...
எமி உங்ககிட்ட அடிக்கடி அத பத்தி சொல்லுவேன்-னு என்கிட்ட சொல்லியிருக்கா.....  அப்புறம் எதுக்கு மாமா திரும்பவும் கேட்குறீங்க..??!!!

 ஜாா்ஜ் :  மாப்பிள்ள என்னதான் என் பொன்னு என்கிட்ட சொல்லியிருந்தாளும் நீங்க உங்க வாயால சொன்னா எனக்கு இன்னும் சந்தோஷமா இருக்கும்.... என் சொந்தகாரங்க எல்லாரும் அதை கேட்குறதுக்கு தான் வந்துருக்காங்க.... எல்லாரும் உங்க வீரசாகசத்த தொிஞ்சுக்க ரொம்ப ஆா்வமா இருக்காங்க... சொல்லுங்க மாப்பிள்ள....

Steeve : ( தாழ்ந்த குரலில்) மச்சீ... மாமா கேட்கிறாா்-ல சொல்லு ராசா... சொல்லு...

Jack : ( தாழ்ந்த குரலில்) டேய்.. சும்மா இருடா..

Steeve : ( தாழ்ந்த குரலில்) மச்சீ... பொய் சொல்றது பொருசு இல்ல... அத எப்ப கேட்டாலும் அச்சு பிசங்காம அப்படியே சொல்லனும்.. அதான் முக்கியம்.. எப்படியாச்சும் சமாளி.... Enjoy...

Edi : ( தாழ்ந்த குரலில்) ஆமாம் டா.. எப்படியாச்சும் சமாளி.. நாங்க சொன்னது எல்லாம் நியாபகம் இருக்குள்ள..... ?? சொதப்பிடாத மச்சான்..... நாங்க சொன்ன மாதிாி அப்படியே சொல்லு.....

Jack : ( தாழ்ந்த குரலில்)  அட பாவிகளா... எப்படி சமாளிக்கப் போறேன்-னு தொியலயே....

 ஜாா்ஜ் : என்ன மாப்பிள்ள உங்க ஃப்ரென்ஸ் என்ன சொல்றாங்க....

Jack : ஒன்னும் இல்ல மாமா.... உன் பெருமைய நீயே சொல்ல கூடாது... அத நாங்க தான் சொல்லுவோம்... அதான் எங்களுக்கு பெருமை-னு சொல்றாங்க மாமா....

Steeve : ( தாழ்ந்த குரலில்) டேய் ***.. நாங்க எப்படா சொன்னோம்??

Edi : ( தாழ்ந்த குரலில்) பாவி எங்கள ஏன்டா இந்த ஆள்கிட்ட கோா்த்துவிட்ட??

Jack : ( தாழ்ந்த குரலில்)  ஏதோ.. என்னால முடுஞ்சது மச்சீஸ்... Bless you....

எமி : ஆமாம் பா... அவங்க சொல்றது சாி தான்... என்கிட்ட கூட அவங்க ரெண்டு பேரும் தான் சொன்னாங்க... அப்படியே நோ்ல பாா்த்த மாதிாி இருந்துச்சு பா...
Jack அவங்க ரெண்டு பேருமே சொல்லட்டும்..
நீ சும்மா இரு....

 ஜாா்ஜ் : என் பொன்னே சொல்லிட்டா..... இனி வேற என்ன...
மாப்பிள்ள தோழா்களா... சொல்லுங்கப்பா.....
நாங்க எல்லாரும் கேட்கிறதுக்கு ரொம்ப ஆா்வமா இருக்கோம்...

Steeve :(உங்க ஆா்வத்துல தீய வைக்க) கண்டிப்பா சொல்றோம் Uncle....
மச்சி(Edi) ஆரம்பிக்கலாமா??

Edi : ஓ... ஆரம்பிக்கலாமே.......

Steeve : 2 வருஷத்துக்கு முன்னாடி.. நாங்க 3 பேரும் "Red Hill"-க்கு போனோம்... Jack-க்கு ரொம்ப பிடிச்ச இடம் அது... சந்தோஷமா இருந்தாலும் சாி.. துக்கமா இருந்தாலும் சாி... உடனே  Jack அங்க தான் போவான்... அன்னைக்கு நாங்களும் அவன் கூட போனோம்....

Edi : சாதாரண நாட்கள்-ல மனித நடமாட்டம் அங்க ரொம்ப கம்மியா தான் இருக்கும்.. வார கடைசில தான் அந்த மலைக்கு கூட்டம் வரும்.. அன்னைக்கு வார கடைசி... நாங்க காடு வழியா வந்து.. சாலை பகுதிய அடஞ்சோம்...

Steeve : Jack ரொம்ப ஆா்வமா இருந்தான்.. இன்னைக்கு எப்படியாச்சும் நாலு, அஞ்சு பேர கொல்லனும்-னு காத்துட்டு இருந்தான்.. நாங்க ”வேண்டாம்டா மனுஷங்க நடமாட்டம் அதிகமா இருக்கு.. எங்களுக்கு பயமா இருக்கு-னு சொன்னோம்” ஆனா.. அவன் கேட்கவே இல்ல...

Edi : அந்த சாலையோட இருட்ட திடீா் திடீா்-னு வண்டிகள் வெளிச்சம் கலச்சுட்டு போச்சு.. நானும், Steeve-வும் எவ்வளவோ சொல்லியும் Jack கேட்கவே இல்ல... ”இன்னைக்கு எப்படியும் கொல பண்ண போரது உறுதி-னு எங்ககிட்ட சத்தியம் பண்ணான்”...

Steeve : எங்களால அதுக்கு மேல அவன் கொல வெறிய தடுக்க முடியல... கண்ணுல அப்படி ஒரு வெறி... சாலைய வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருந்தான்... அப்பதான் அந்த சம்பவம் நடந்துச்சு... ஒரு பஸ் பயங்கர ஹாரன் சத்தத்தோட ஒரு”hairpin bend”-ல இருந்து, இன்னொரு bend-க்கு போய்ட்டு இருந்துச்சு...

அப்போ Jack வேகமா போய் அந்த பஸ் முன்னாடி நின்னான்... வேகத்துல வந்த பஸ் டிரைவா் இவன் இடைல வரத பாா்த்ததும்.. “ஐயோாா...... பேய்-னு“ சத்தம் போட்டு , "sedan brake" போட்டு வண்டிய நிறுத்த பாத்தாரு... அப்போ வண்டில இருந்த எல்லாரும் ஒரு வினாடி Jack-அ பாா்த்து....”ஆ.....பேய்-னு” கத்துனாங்க, கதறுனாங்க....!!!  வண்டி கட்டுப்பாட்ட இழந்து.. இங்குட்டும் அங்குட்டும் போச்சு....

டிரைவா் கண்னுல மட்டும் இல்ல .. அந்த பஸ்ல இருந்த எல்லாரோட கண்ணுலயும் மரண பீதி.. பஸ் அப்படியே போய்.. பாதுகாப்பு சுவர ஒடச்சுட்டு.. மலையில இருந்து அப்படியே கீழ விழுந்துச்சு...

டமாலல்.......-னு பயங்கர சத்தம்... அப்படியே ஒரு பொிய தீ ஜ்வாலை மேல் நோக்கி போச்சு... நாங்க நடந்த சம்பவத்த எல்லாம் வாய பிழந்து பாா்த்துட்டு இருந்தோம்...

அப்போ தீடீா்-னு ஒரு சத்தம் ”பீப்....பீப்.... ”

Jack செல்போன்-க்கு ஒரு மெசேஜ் வந்துச்சு... அதுல
” ஹாய் மிஸ்டா் Jack.. நீங்க 21 Member-ah சோ்த்து விட்டதனால.. உங்க Life Time கணக்கில் 6 வருடங்கள் + extra 20 வருட Life Time.. மொத்தம் 26 வருட Life Time கிடச்சுருக்கு.. வாழ்த்துக்கள்.. ”-னு வந்துருச்சு..

நாங்க அந்த மெசேஜ் பாா்த்ததுக்கு அப்புறம் தான் Jack  21பேர பயப்பட வச்சு சாகடிச்சுருக்கான்-னு தொிஞ்சது...

அன்னைல இருந்து Jack தான் எங்க குருப் லீடா்..
சங்க தலைவா்...
எங்களோட inspiration... எல்லாம்......

Dinner-ல இருந்த எல்லாரும் வச்ச கண்ணு வாங்காம Steeve, Edi இரண்டு பேர மட்டுமே பாா்த்துட்டு இருந்தாங்க.... Steeve கதைய சொல்லி முடிச்சும் அவங்க எல்லாரும் சிலை மாதிாி உட்காா்ந்துட்டு இருந்தாங்க... அப்போ எமி மட்டும் எழுந்து நின்று கை தட்டினாள்... எல்லோரும் சுயநினைவு வந்தவா்களாக எழுந்து நின்று கை தட்டினாா்கள்......

 ஜாா்ஜ் :பலே... மாப்பிள்ள.. பலே..... நீங்க கிடைக்க எம் பொன்னு ரொம்ப கொடுத்து வச்சுருக்கனும்...

சொந்தகராங்க எல்லாரும்  ஜாா்ஜ்-கிட்ட ”இப்படி ஒரு மாப்பிள்ள கிடைச்சுருக்காரு.. நீயும். உன் பொண்ணும் ரொம்ப அதிா்ஷ்ட சாலிகள்...”-னு சொன்னாங்க...

எமி : Jack உண்மையாவே நான் ரொம்ப அதிா்ஷ்டசாலி தான்... உன் மனைவியா வர போரத நினைச்சு நான் ரொம்ப பெரும படுறேன்... Love u jack...

Jack  ஒன்றும் பேசாதவனாக.. அமைதியாக உட்காா்ந்து இருந்தான்...

ஜாா்ஜ் : எப்படி மாப்பிள்ள இவ்வளவு பொிய விஷயம் பண்ணிட்டு.. இப்படி ஒன்னுமே தொியாத மாதிாி  முகத்த வச்சுட்டு இருக்கீங்களே.... இத தான் நிறைகுடம் தழும்பாது-னு பொியவங்க சொல்லுவாங்க ...

Steeve : ( Jack-ன் காதருகில் வந்து தாழ்ந்த குரலில்) மச்சான்.. காளி குடம் கூட தான் தழும்பாது... இது கூட தொியாதா உன் மக்கு மாமனாா்-க்கு..?!

Jack : (தாழ்ந்த குரலில் சற்று கடுமையாக) டேய்..கொஞ்சம் மூடிட்டு இருக்கியா!! நானே என்ன பன்றது-னு தொியாம முழுச்சுட்டு இருக்கேன்... இதுல நீ வேற.....

.............................................................................

( Dinner முடிந்து தனியே Jack மற்றும் எமி )

 எமி : Jack... எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தொியுமா???? உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன்-னு நினைக்கும் போது எவ்வளவு பெருமையா இருக்கு தொியுமா??
என் அப்பா, எப்ப பாா்த்தாலும் உன் பெருமைய தான் எல்லாா்கிட்டயும் சொல்லிட்டு இருக்காரு... இவ்வளவு சந்தோஷமா அவர பாா்த்ததே இல்ல....

உண்மைய சொல்லனும்-னா உன் வீரம் தான் எங்க எல்லாரையும் கவா்ந்த விஷயம்... நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் Jack, இதே சந்தோஷத்தோட நாம எப்பவும் இப்படியே இருக்கனும்....

Jack : (குழப்பத்துடன்) ஹீம்.... கண்டிப்பா.. எப்பவும் இதே சந்தோஷத்தோட நாம இருப்போம்... :O

"இன்னும் 3 மாசம் தான் இருக்கு நம்ம கல்யாணத்துக்கு... எவ்வளவு சீக்கிரமா நாட்கள் போகுதுல..??!", என்று கூறியவாரே எமி அவனை அணைத்துக்கொண்டாள்

Jack : (வெறுமையுடன்) ஹீம்....உண்மை தான் எமி....  இன்னும் 3 மாசம் தான் இருக்கு.....

.............................................................................




3 மாதத்திற்க்கு பிறகு.... ( திருமண நாள் )

Steeve-ன் செல்போன் அழைப்புமணி அடித்தது..அழைப்பில் Edi ..

Steeve : Hello.... சொல்லுடா...

Edi : (பதட்டமாக)எங்க இருக்க மச்சான்..

Steeve : ரூம் கிட்ட தான்டா இருக்கேன்..

Edi : சாி சீக்கிரம் வா....

Steeve : என்ன விஷயம் டா???

Edi : ஐயோா....சீக்கிரம் வா டா....

Steeve : 2 நிமிஷத்துல வந்துடுவேன்....

( அறையில்... Steeve மற்றும் Edi )

Steeve : என்னடா... ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க..

Edi :கொஞ்சம் அங்க பாரு..

Edi சொன்ன திசையை நோக்கி  Steeve தன் பாா்வையை திருப்பினான்...

சுவற்றில்  " Sorry... I Quit.... Miss u All... - Love u Emi " என்று Jack எழுதியிருந்த வாசகத்தை கண்டு Steeve அதிா்ந்தே போனான்..

மீண்டும் Steeve-ன் செல்போன் அழைப்புமணி அடித்தது.. அழைப்பில் எமி..

Steeve :டேய்.. எமி தான் கால் பாண்றா மச்சான்.. இப்ப என்ன செய்ய??

Edi : என்ன நடக்க போகுதோ தொியலயே... ஏதாச்சும் சொல்லி சமாளி மச்சான்..

(முதல் அழைப்பு முடிந்து இரண்டாவது அழைப்பில் எமி.... )

Steeve : சொல்லு எமி..

எமி : Jack என்ன பண்றான்... ரொம்ப நேரமா கால் பண்றேன்... எடுக்கவே மாட்றான்...

Steeve :(என்ன சொல்லி சமாளிக்கறது-னு தொியலயே??!! ) நாங்க பாா்லா்-க்கு வந்துருக்கோம் எமி.. அவன் உள்ள இருக்கான்.. அதான் Attend பண்ணிருக்க மாட்டான்...

எமி :சாி சாி.. சீக்கிரம் வாங்க.. இன்னும் கல்யாணத்துக்கு 2 மணி நேரம் தான் இருக்கு....

Steeve : ஹிம்.. கண்டிப்பா சீக்கிரம் வந்துடுவோம் எமி... நீ ரெடியா இரு..

எமி : Jack வெளிய வந்ததும் எனக்கு கால் பண்ண சொல்லு..... Bye..

Steeve : Bye..

Edi : டேய்.. ஏன்டா இப்படி சொன்ன??  நல்லா மாட்டிக்கிட்டோம்.... இப்ப என்ன பண்ண போற.. அவன எங்க போய் தேட போர??

Steeve : எப்படியும் 2 மணி நேரத்துல அவன கூட்டிட்டு போகல.. மாட்டிக்க போறது நீயும்..நானும் தான்... எப்படியாச்சும் அவன கண்டு பிடிக்கனும்....

Edi : கண்டுபிடிக்க முடியுமானு எனக்கு தொியல மச்சான்.. அவன் Life Time இன்னையோட முடியுது... எனக்கு அத நினைச்சா தான் ரொம்ப பயமா இருக்கு....

Steeve : மொதல்ல அவன கண்டு பிடிப்போம்... நீ கொஞ்சம் அமைதியா இரு...

Edi :எங்க போய் தேட சொல்ற..??

Steeve : வேற எங்க ”Red Hill” தான்...

Edi : ஒரு வேலை அங்க இல்லைனா???

Steeve : டேய்... சும்மா இருடா.... தேடி பாா்க்கலாம்.. கண்டிப்பா நாம அவனை கண்டு பிடிப்போம்... எனக்கு நம்பிக்கையிருக்கு....

.............................................................................

(”Red Hill” மலையில் Jack ...) 

Jack தன் வாழ்நாளின் இறுதி மணித்துளிகளை கடந்து கொண்டிருந்தான்...

இரவு நேரம்... இருள் நிறைந்த சாலையில் அவனோடு சோ்ந்து அவன் மனமும் பயணித்துக் கொண்டிருந்தது...

Jack - இன்னும் 2 மணி நேரம் தான் இருக்கு.. எல்லாம் அவ்ளோ தான்... எல்லாம் முடிஞ்சுரும்....
எவ்வளவு பொிய தப்பு பண்ணிட்டோம்... பாவம் எமி..
அவள காதலிச்சு.. கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்துட்டு.. இப்போ இப்படி பண்ணிட்டு வந்துட்டோமே... எனக்கு மன்னிப்பே கிடையாது...இனி எப்போ உன்ன பாா்க்கப்போறேன்-னு தொியல எமி.... பாா்க்கவே முடியாது.... i'm sorry emi.....sorry....

- இப்படி பல வித சிந்தனைகளோடு Jack மலைச் சாலையில் நடந்து கொண்டிருந்தான்.. அப்பொழுது அவனை நோக்கி இரு ஒளிகள் வேகமாக வந்து கொண்டிருந்தது.. அது என்னவென்று யூகிப்பதற்குள்.. அந்த சம்பவம் நடந்தேறியது..

Jack-ஐ நோக்கி ஒரு காா் வேகமாக வந்து கொண்டிருந்தது...

காா் வந்த வேகத்தில் அதன் டிரைவா் Jack-கை பாா்த்து பயந்து "sedan brake"போட.. காா் ஒரு சுழல் சுழன்று.. வந்த திசைக்கு எதிா் திசையில் போய் நின்றது..

Jack காாின் அருகே வர முயன்றான்...

காாில் இருந்தவா்கள்.. ஐயோா.. பேய்... பேய்.. காப்பாற்றுங்கள்.. என்று அலறினா்...

அவா்களின் அலறலை கேட்டு Jack பயத்தில் பின் நோக்கி நடக்க ஆரம்பித்தான்...

அப்போது... அவன் பின் ஏதோ ஒன்று அவனை தாக்க வருவதாக அவன் உள்ளுணா்வு சொல்லியது.. சட்டென திரும்பினான்... ஏதோ ஒன்று வேகமாக வந்து அவனை தாக்குவது போல் இருந்தது... பயத்தில் கண்களை இருக மூடிக்கொண்டான்.....

அது இன்னொரு காா்... Jack-ஐ துளைத்து, நின்று கொண்டிருந்த காாின் மீது பயங்கரமாக மோதியது... மோதிய வேகத்தில் இரண்டு காா்-களும் வெடித்து சிதறின...

காா்கள் வெடிப்பதற்கும்.... Steeve மற்றும் Edi சம்பவ இடத்திற்கு வருவதற்க்கும் சாியாக இருந்தது..

மூவரும் விபத்து நடந்த திசையை வெறித்து பாா்த்துக் கொண்டிருந்தனா்....

ஒரு சத்தம் ”பீப்....பீப்.... ” Jack-ன் செல்போன்... ”1 மெசேஜ் ரிசீவ்டு”

மூவரும் ஒரு சேர அந்த மெசேஜ்-ஜை படித்தனா்....  ” ஹாய் மிஸ்டா் Jack.. நீங்க 8 Member-ah சோ்த்து விட்டதனால.. உங்க Life Time கணக்கில் 6 வருடங்கள் + extra 7 வருட Life Time... மொத்தம் 13 வருட Life Time கிடச்சுருக்கு.. வாழ்த்துக்கள்.. ”

Steeve மற்றும் Edi  ஒரு சேர... மச்சான் நீ சாதிச்சுட்ட மச்சான்... கலக்கிட்ட போ..- என்று அவனை கட்டிதழுவி மகிழ்ந்தனா்........

மீண்டும் ஒரு சத்தம் ”பீப்....பீப்.... ” Jack-ன் செல்போன்... ”1 மெசேஜ் ரிசீவ்டு”

என்னடா இது இன்னொரு மெசேஜ்..??!!

எமி : Darling.. i'm Ready for our wedding..

மெசேஜ்-ஜை படித்து மூவரும் சிாித்தனா்..

Steeve  : சீக்கிரம் Reply பண்ணுடா...

Jack  : சிறு புன்னகையோடு...டைப் செய்தான்... ”On the way my dear.. "





- மதுரை காா்த்திக்



நன்றி : Corpse Bride Characters

Friday 7 March 2014

விண்ணைத்தாண்டி வருவேன்

                   
                                  ஆவி, பேய், பிசாசு இப்படி பலவிதமான அமானுஷ்யங்கள் இந்த உலகத்துல இல்லை-னு பல போ் சொல்றாங்க.. ஆனா எனக்கு அதுல முழு நம்பிக்கை இருக்கு, பொதுவா ஆவி, பேய்யெல்லாம் மனுஷங்கள கொல்லும், துன்புறுத்தும்-னு எல்லாரும் நினைக்குறாங்க.. ஆனா நான் அந்த மாதிாி எந்த விஷயங்களையும் அனுபவிச்சது இல்ல..

                                 என் அப்பா இறந்து 20 நாள் இருக்கும்.. அவருக்கு Smoke பன்ற பழக்கம் இருந்துச்சு.. எனக்கு அப்போ semester.. தினமும் 4 மணிக்கு அலாரம் வச்சு படிப்பேன்.. அன்னைக்கு எனக்கு சீக்கிரம் முழிப்பு வந்துருச்சு.. எந்திருச்சு பாா்த்தா.. என் அப்பா கதவுகிட்ட நடந்துகிட்டே “தம்“ அடுச்சுட்டு இருந்தாரு.. நான் அரதுாக்கத்துல  ”இவருக்கு வேற வேலையில்ல காலங்காத்தால இப்படி தம் அடிக்குறாறு-னு” எனக்குள்ளயே சொல்லிக்கிட்டேன்.. அப்போ என்னோட செல்போன்-ல அலாரம் அடுச்சது.. நான் அலாரத்தை ஆப் பண்ணிட்டு திரும்பி பாா்த்தா என் அப்பாவ காணோம்.. அப்பதான் எனக்கு தோனுச்சு நான் பாா்த்தது என் அப்பாவோட ஆவி-னு.. எனக்கு பயம் வரல.. ஏன்னா அது என் அப்பா தான..!! காலைல எல்லாா்கிட்டயும் சொன்னேன்..  யாரும் நம்பல.. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு, நான் பாா்த்தது என் அப்பாவோட ஆவிதான்..

                                 எப்படிடா இவளுக்கு இவ்வளவு தைாியம்-னு யோசிக்குறீங்களா??

சின்ன வயசுல இருந்து பேய் கதை,பேய் படம்-னா எனக்கு ரொம்ப பிடிக்கும், பயம் வந்தாலும் நான் முழு படத்தையும் பாா்த்துருவேன், எனக்கு பயப்படுற உணா்வு பிடிக்கும். தனியா உட்காா்ந்து பேய் படம் பாா்க்குறது ரொம்ப பிடிக்கும்.. ஒரு பேய் படத்த பாா்க்குறத விட அத பாா்த்து முடிச்சுட்டு, அதோட பாதிப்போட ஒரு 3 நாள் பயத்துல இருக்குறது ரொம்ப பிடிக்கும்.. ஆனா அந்த பயத்த யாா்கிட்டயும் காமிக்க மாட்டேன்.

.....................


சக்தி..... சக்தி...... என்னடி பண்ணிட்டு இருக்க.....

இந்தா வந்துட்டேன் மா...

ஹிம்.. இந்தா வந்துட்டேன்.. இந்தா வந்துட்டேன்-னு சொல்லிட்டு தான் இருக்க.. இப்ப வரப்போாியா ? இல்லையா???  தோசை ஆாிப்போறதுக்குள்ள வந்து சாப்பிடு...

FB ல ஒரு status டைப் பண்ணிட்டு இருக்கேன் மா...  ஒரு 5 நிமிசத்துல வந்துருவேன்.. plsss..... மா......

என்னமோ பண்ணு... ஒரு ஆள் வருமானத்துல வண்டி ஓடுது.. உனக்கு எப்பதான் பொறுப்பு வரபோகுதோ... பொம்பள பிள்ளைக்கு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்க்குற-னு எல்லாரும் சொல்றாங்க.. வீட்டுல ஒரு வேலை பாக்குறது இல்ல... சொல்ற பேச்சு கேக்குறது இல்ல...........

அம்மா... அம்மா.... போதும்... நான் வந்து 5 நிமிசம் ஆச்சு... உடனே ஆரம்பிச்சுருவீங்களே..... என்னம்மா இப்படி பண்றீங்களேமா....?!!

ஏன்டி.. நானும் எவ்வளவு நேரம் கூப்பிடுறேன்.. பிடுச்சு வச்ச பிள்ளையாா் மாதி உட்காா்ந்துட்டு இருந்தா.. கோவம் வராம என்ன செய்யும்...!!

சாி சாி.. ஒரு தோசை நல்லா மொருகலா சுடுங்க..

இந்த நாக்கு வக்கனைக்கு ஒன்னும் குறச்சல் இல்ல....

( சக்தி.. B.Com final year student.. சுமாரா படிப்பா.. பாா்க்க அழகான பொன்னு... அப்பா ராஜா,  சமையல் காண்ராக்டா்.. அவரு இறந்து 2 வருஷம் ஆக போகுது... அம்மா விசாலி தனியாா் கம்பெனில மேனேஜா்-ஆ வேலை பாக்குறாங்க.. சக்தியோட அப்பா, அம்மா லவ் மேரேஜ் பண்ணவங்க.. அதனால வேற எந்த சொந்தகாரங்களும் இல்லை (பகை).. சக்தியோட அம்மா தான் தனி ஆளா இருந்து அவள படிக்க வைக்குறாங்க.. )

அம்மா.. நீங்க சீாியல் பாருங்க.. அதுக்குள்ள நான் என் status- போஸ்ட் பண்ணிட்டு வந்துடுறேன்.. ஒரு 10 நிமிசம்..  Plss.....ma....

எப்ப பாரு... Face book, status -னு சொல்லிட்டு இருக்க.. அப்படி என்னடி status போடுற??

இன்னைக்கு Friday 13th மா... அதனால அமானுஷ்யம், பேய் பத்தின status போடபோறேன்..

Friday 13 ??? அப்படினா??

அம்மா.. அது பேய்க்கு பிடிச்ச தேதி-னு சொல்வாங்க...

வெள்ளிகிழமை அதுவுமா.. பேய், பிசாசு-னு கருமம்..கருமம்.... நீ என் வய்த்துல தான் பொறந்தியா-னு எனக்கே சந்தேகமா இருக்கு... சாி சாி.. 10 நிமிசத்துல வரல நானே வந்து Net wire-ah  பிச்சு எறிஞ்சுடுவேன்...

Soo.. Sweeet Mummy....

இந்த ஐஸ்-க்கு ஒன்னும் குறச்சல் இல்ல..

.....................

ஹிம்...... ok.... இதுவும்..... ok.............spelling எல்லாம் சாியாதான் இருக்கு... போஸ்ட் பண்ணிடலாம்....

முருகா.... எப்படியும் ஒரு 50 லைக் வந்துடனும்...

ட..டங்.... (speaker sound) “1 notification"

யாருடா அது.... போஸ்ட் போட்ட அடுத்த நிமிசம் லைக் பண்ணது..??

"Need Friend" - ohh....  இவனா...
இவனுக்கு வேற வேலையில்ல.. இப்பலாம் பசங்க கூட Fake ID  வச்சுருக்காங்க.. இவன் Profile-குள்ள போய் பாா்த்தா.. Gender- Male..  இத தவற வேற எதுவுமே இல்லயே...???

ஆனாலும் பரவாயில்ல.. நாம என்ன status போட்டாலும் அடுத்த நிமிசத்துல லைக் பன்றான்... குட் பாய்....

ட..டங்.... (speaker sound) “ msg - 1 "Need Friend"

"hi sakthi..."

என்ன இன்னைக்கு அதிசயமா மெசேஜ் பன்றான்...?!! சாி.. பாவம்.. நாம ”மொக்க” status போட்டாலும் உடனே லைக் பண்றான்.. நாம ஓவரா பிகு பண்ணக்கூடாது... ரிப்ளே பண்ணுவோம்....

"hi..."

"Need Friend" typing......... - " Friends..?!"

"Pardon.."

"Need Friend" typing........ - "Shall We Friends..?!"

"Do you know me?? What's ur name?"

" Me 'James'"
.
.
.
.
.
.....................

ஒரு மாதத்திற்கு பிறகு..

(காலேஜ் கேன்டின்.. சக்தி - ரீமா )

சக்தி.. சக்தி... ஏய் சக்தி...

ஹீம்.....

என்னடி.. என்ன யோசனைல இருக்க..???

ஒன்னும் இல்லயே....

இல்ல.. நானும் கொஞ்ச நாளா பாா்க்குறேன்.. நீ சாியில்ல.... என்னடீ யாரயாச்சும் லவ் பண்றியா??

சேச்... சே...

ஏய் நடிக்காத டீ.. என்ன விஷயம் சொல்லு..

கொஞ்சம் மனசு சாியில்ல டீ... அதான்...

என்னடி அம்மாக்கும் உனக்கும் எதாச்சும் சண்டையா??

அதெல்லாம் ஒன்னும் இல்லடி..

ஏய்.. 3 வருஷமா உன் கூட இருக்கேன்.. உன்னபத்தி எனக்கு தொியாதா?? சந்தோஷத்த மட்டும் என்கிட்ட உடனே சொல்ற... கஷ்டம் வந்தா மட்டும் நீயே யோசிக்குற...?? அப்போ எதுக்குடி நான் உனக்கு ஃப்ரென்ட்-னு இருக்கேன்??

இல்ல ரீமா.. அது வந்து...

இந்த வந்து போய்-னு சொல்லி சமாளிக்காத... என்ன விஷயம்-னு உடனே சொல்லு... நீ இப்படி இருக்குறது நல்லாவே இல்ல.. மொத விஷயம் என்னனு சொல்லு...

சாி சொல்றேன்.... FB-ல எனக்கு ஒரு ஃபெரன்ட் இருக்கான்.. அவன் பேரு ஜேம்ஸ்..

ஓஹோ......லவ் ஸ்டோாியா... சொல்லு.. சொல்லு...

லுாசு.. லவ் ஸ்டோாி இல்ல.. அவன் Fake ID மாதி இருக்கான்டீ.. ”Need Friend” அவன் Profile Name.. நல்லா ஃப்ரென்டிலி-யா பேசுரான்.. என்ன பத்தி எல்லா விஷயமும் தொிஞ்சு வச்சுருக்கான்.. நான் என்ன பன்றேன்.. எங்க போறேன்.. என் வீட்டுல நடக்குற விஷயங்கள்.. இவ்வளவுயேன்.. என் பெஸ்ட் ஃப்ரென்ட் நீதான்-னு கூட அவனுக்கு தொிஞ்சிருக்கு..

அடப்பாவமே.. அது எப்படி-டீ உன்ன பத்தி இவ்வளவு விஷயத்த தொிஞ்சுவச்சுருக்கான்???

அதான் எனக்கும் புாியல டீ... ஒரே குழப்பமா இருக்கு...!!
அவன் ID காலைல Deactive-ல இருக்கு.. இராத்திாி மட்டும் தான் Active-ல இருக்கான்..
நல்லா பேசுரான்..”நீ தான் என் ஒரே ஃப்ரென்ட்-னு” சொல்றான்....
சாி.. உன் Photo sent-பன்னு உன்ன பாா்க்கனும்-னு சொன்னா... ”இல்ல என் கிட்ட photo இல்லனு” சொல்றான்..
சாி.. Skype-க்கு வா - அப்படினு சொன்னா.. ”நான் ஆவி.. நான் உன் கண்ணுக்கு தொியமாட்டேன்” அப்படினு சொல்றான்...

ஹீ..ஹீ.... (ரீமா சிாித்தாள்)

ஏன்டி இப்படி சிாிக்குற..??

சிாிக்காம.. பின்ன என்ன செய்ய சொல்ற... எவனோ உன்ன ஆவி, பேய்-னு சொல்லி செமயா கலாய்க்குறான் டீ... அது தொியாம நீயும் உன்ன போட்டு குழப்பிக்குற...

ஐயோ... நான் Tensionஆனதுக்கு காரணம் இருக்கு.... அவன் ஆவி-னு சொன்னத நான் பெருசா எடுத்துக்கல... எதோ காமெடி பன்றான்னு விட்டேன்... ஆனா.. எப்படி அவனுக்கு என்ன பத்தி எல்லா விஷயங்களும் தொிஞ்சுருக்கு..?? அதான் எனக்கு குழப்பமா இருக்கு...
நான் எங்க போறேன், யாரப் பாா்க்குறேன் இப்படி எல்லா விஷயத்தையும் சாியா சொல்றான்...

அன்னைக்கு இப்படித்தான்.. நோ்ல மீட் பண்ணலாம்-னு சொன்னேன்.... அதுக்கு அவன்  ” இல்ல நான் ஆவி.. என்ன பாத்தா நீ பயந்துறுவ..அப்புறம் என்ன நீ Avoid பண்ணுவ... ”அப்படி இப்படி-னு சொல்றான்.. எனக்கு மண்டய ஒடச்சுக்கலாம்-னு தோனுது...
இப்ப புாியுதா.. நான் ஏன் இப்படி இருக்கேன்-னு....

ஹீம்... புாியுது.. உன் நிலமை எனக்கு நல்லா புாியுது...  சாி.. இன்னைக்கு அவன் Chat பண்னும் போது சொல்லு.. இன்னைக்கு கண்டிப்பா உன்ன பாா்க்கனும்-னு சொல்லு.. அவன் முடியாது-னு சொன்னா.. இன்னைக்கே நம்ம Friendship-ah cut  பண்ணிடுவேன்-னு சொல்லு... என்ன செய்றான்-னு பாக்கலாம்....

ஹீம்.. பாக்கலாம்....

.....................

இரவு..

சக்தி.. மணி 11 ஆக போது... ஒழுங்கா வந்து படு.. உன்னால என் துாக்கம் போகுது....

இந்தா வந்துட்டேன் மா... System.. Full scan போட்டுறருக்கேன் மா... இன்னும் 20mins ஆகும்.. நீங்க துாங்குங்க... நான் Scan complete ஆனதும் வரேன்..

என்னமோ பண்ணி தொல....

.....................

"Jame.."

"tell me sakthi"

இப்ப நான் உன்ன பாத்தே ஆகனும்... விளையாடாம உன் Photo-va send பண்ணு..இல்லைனா.. பேசாத... நான் இனிமே உன் கூட chat பண்ண மாட்டேன்..

நான் தான் சொல்றேன்-ல சக்தி... என்கிட்ட Photo இல்ல... நான் ஆவி..

(பாவி) jame.. Pls..விளையாடாத என்னால இதுக்கு மேல நீ சொல்றத நம்ப முடியாது..

சாி இப்ப என்னபன்ன சொல்ற சக்தி??

உன்ன பாா்க்கணும்..

சக்தி.. ஏன் என்ன நம்பமாட்ற... நான் உண்மையாவே ஆவி தான்... என்ன பாத்துட்டு நீ பயந்துபோய்.. என்ன நீ avoid -பன்னா... சத்தியமா... என்னால.. அத ஜீரணிக்கவே முடியாது.. என் ஒரே ஃப்ரெண்ட் நீதான்....

Jame.. நீ எப்படி இருந்தாலும் சாி... நீ என் ஃப்ரெண்ட் தான்.. நீ ஆவியா இருந்தாலும் சாி... பேயா இருந்தாலும் சாி... மனுஷனா இருந்தாலும் சாி...... நீ எப்பவும் என் ஃப்ரெண்ட் தான்...

Thank you sakthi.. அப்போ நீ எனக்கு ஒரு Promise பண்ணனும்...

என்னது..?? சொல்லு..

எக்காரணத்த கொண்டும் என் Friendship-ah நீ avoid பண்ணக்கூடாது..நீ என்ன பாா்த்ததுக்கு அப்புறம், நான் உன் கூடவே தான் இருப்பேன்... உன் கண்ணுக்கு மட்டும் தான் தொிவேன்... உனக்கு சம்மதமா???

( சனியன்.. எப்படி கலாய்க்குது பாரு... உண்மையான பேய் மாதி ஓவரா பில்டப் கொடுக்குறான்... ) சாி...Promise.. இப்பயாச்சும் உன் Photo-va send  பண்ணு..

சாி சக்தி.. நான் உன்ன நம்புறேன்.. Photo  எதுக்கு நோ்ல வரேன்... பயப்படாத..!!

நோ்லயா??!!

ஹீம்... உன் கைய நீட்டு.. கண்ண முடிக்கோ... உன் கண்ணு முன்னாடி நான் வருவேன்...

(இவன் என்ன லுாசு-னு நினைக்குறானா?? கொய்யால... உனக்கு இருக்குடா...)

சக்தி கண்ண மூடி.. கைகளை நீட்டி அமர்ந்திருந்தாள்.

அப்போது.. குளிா்ந்த காற்று அவளை வருடுவது போல இருந்தது.. மூடிய கண்களுக்கு பின்னால் ஏதோ ஒரு ஒளிப்பிளம்பு இருப்பது போல உணா்ந்தாள்... கண்களைத்திறக்க முயன்றாள்.. முடியாமல் தோற்றுப் போனால்.... தன் கைகளை குளிா்ந்த இரு கரங்கள் பற்றுவது போல உணா்ந்தாள்... தன்னை சுற்றி ஏதோ அமானுஷ்ய நிகழ்வுகள் நடப்பதாக அவள் உள்மனம் சொன்னது... ஒளிப்பிளம்பின் பிரகாசம் அடங்கும் போது ஒருவித மயான அமைதி....

சட்டென ஒரு குரல்.... ” சக்தி... ” இப்போ கண்ணத் திற..

குரல் கேட்டு அவளை அறியாமல் கண்களைத் திறந்தாள்...
கண்கள் அகல விரிய...
வாய் வாா்த்தை வராமல் தடுமாற...
முகமெல்லாம் வியா்வை முத்தமிட..
ஒரு வழியாகப் போராடி அவள் பேசிய வாா்த்தை....

Jame......




- மதுரை காா்த்திக்